search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஅமைச்சர் எவ வேலு"

    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணிகள் ஒதுக்கி இருக்கிறார்கள்.
    • குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடியவில்லை.

    சென்னை:

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சைதாப்பேட்டை பனகல் மாளிகை, பஜார் ரோடு, வேளச்சேரி ரெயில் நிலைய பகுதி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் பகுதிகளில் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் எ.வ.வேலு கூறியதாவது:-

    மழை நீர் வடிகால் கால்வாய் பணிகள் நிறைவடையாமல் போனதற்கு காரணம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணிகள் ஒதுக்கி இருக்கிறார்கள். அதனால்தான் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடியவில்லை. இப்போது நாங்கள் ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணி என்ற அடிப்படையில்தான் பணிகளை ஒதுக்கி வருகிறோம். அ.தி.மு.க. ஆட்சியில்தான் பிரச்சினை. அவர்கள் கஜானாவையும் காலி செய்து, ஊரையும் காலி செய்து விட்டார்கள். நாங்கள்தான் அதை சரி செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×