search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி கடனை செலுத்திய"

    • வாசு திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பைரவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு (வயது 52). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் இரு ந்தது. அவர் அங்கு விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் வாசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி மற்றும் தெரிந்த வர்களிடம் கடன் பெற்று சொந்தமாக வீடு வாங்கினார். ஆரம்பத்தில் கடன் கட்டி கொண்டு வந்தார். ஆனால் தொடர்ந்து அவரால் வங்கி கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படு கிறது.

    இதையடுத்து வாசு அவருக்கு சொந்தமான விவசாய வயலை விற்றார். அந்த பணத்தை கொண்டு கடனை அடை த்தார். இதை தொடர்ந்து அவர் கடனுக்காக தனது விவசாய தோட்டத்தை விற்று விட்டோமே என புலம்பி கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் மன வேதனையில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று வீட்டின் மாடியில் வாசு திடீரென விஷம் (பூச்சி மருந்து) குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாசு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இற ந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×