search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல் தற்கொலை"

    • கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
    • மனைவியுடன் விவாகரத்து பெற்றது முதல் சிவா ரெட்டி மனமுடைந்து விரக்தியாக காணப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் சிவா ரெட்டி (வயது 44). இவரது மனைவி ரமாதேவி. தம்பதிக்கு குழந்தை இல்லை. சிவா ரெட்டி விமானப்படை தளத்தில் வேலை செய்து ஓய்வுபெற்று தற்போது ஐதராபாத்தில் உள்ள மதுரா அப்பார்ட்மெண்டில் தங்கி வக்கீலாக வேலை செய்து வந்தார்.

    கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மனைவியுடன் விவாகரத்து பெற்றது முதல் சிவா ரெட்டி மனமுடைந்து விரக்தியாக காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவா ரெட்டி படுக்கையறையில் துப்பாக்கியால் நெற்றிப்போட்டில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிக்கலா பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவா ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×