search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரியை கடத்தல்"

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 39). இவரும், அவரது நண்பர் கள் 2 பேரும் சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் அமைக்கும் லாரியை வாங்கி தொழில் செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு மனோகர் வீட்டின் முன்பு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது லாரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் மர்ம நபர்கள் லாரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருவண்ணாமலை அருகே உள்ள சேரியேந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, அவரது மகன் பிரபு, உறவினர் மகன் மணிகண்டன் ஆகியோர் இணைந்து மனோகரின் வீட் டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்றதும், ஏழுமலைக்கும், மனோகரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததால் லாரியை அவர் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஏழுமலை, பிரபு, மணிகண் டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • 10 கி.மீ.செல்வதற்குள் மடக்கி பிடித்தனர்
    • போலி நம்பர் பிளேட் மாட்டி துணிகரம்

    அணைக்கட்டு:

    ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 34) பிரபல கார் திருடன். இவர் நேற்று இரவு மாதனூர் பகுதியில் கார்களை திருடுவதற்காக நோட்டமிட்டார். அப்போது மாதனூர் அருகே மினி லாரியை நிறுத்தி வைத்திருந்தனர். அதனை திருடிக் கொண்டு குமார் பள்ளிகொண்டா பகுதிக்கு வந்தார்.

    அங்கு வைத்து அந்த லாரியின் இருபுறமும் போலி நம்பர் பிளேட்டை மாட்டினார். பின்னர் வேலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அவர்கள் குமார் ஓட்டி வந்த வாகனத்தை மடக்கினர். அவர்களை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு குமார் அந்த பகுதியில் உள்ள புதர் பகுதிக்கு ஓடினார். போலீசார் அவரை விரட்டி சென்றனர். அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள புதரில் குமார் பதுங்கிக் கொண்டார்.

    அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை ஈடுபட்டனர்.

    2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு பதுங்கி இருந்த குமாரை லாரியை திருடி கொண்டு 10 கிலோமீட்டர் வருவதற்குள் அவர் சிக்கி உள்ளார். பிடித்தனர். விசாரணையில் அவர் மாதனூர் பகுதியில் இருந்து போலியான நம்பர் பிளேட் மாட்டி மினி லாரியை திருடி வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×