search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சுமி தீர்த்தம்"

    • ரூ.11 கோடி மதிப்பீட்டில் லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு பணி தொடங்கியது.
    • மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ரமேஷ், வட்டச் செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம், டிப்போ ரவி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிர–மணியசாமி கோவில் சிதிலம் அடைந்த லட்சுமி தீர்த்தம், புதிய சஷ்டி மண்ட–பம் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதனை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    அறுபடை வீடுகளுள் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சவாமி கோவில் வளாகத்தில் லட்சுமி தீர்த்தம் அமைந்துள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த–ததால் அதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து திருப்பரங் குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் அதனை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட் டது. இதேபோல சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்க–ளுக்கு சஷ்டி மண்டபம் கட்டவும் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட் டது.

    இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின், கடந்த கூட்டத் தொடரில் சட்டப்பேரவை–யில் சஷ்டி மண்டபம் அமைக்க ரூ.4.50 கோடியும், லட்சுமி சீரமைக்க ரூ.6.50 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதன் அடிப்படையில் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு பணி மற்றும் சஷ்டி மண்ட–பம் கட்டுமான பணிகளை ரூ.11 கோடி மதிப்பீட்டில் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கோவில் திருவாச்சி மண்ட–பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி–யில் மதுரை வடக்கு சட்ட–மன்ற உறுப்பினர் தளபதி, மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், இந்து சமய அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, திருப்பரங் குன்றம் கோவில் துணை ஆணையாளர் சுரேஷ், ஸ்தா–னிகப்பட்டர்கள் சுவாமி–நாதன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் பக்தர்கள் அனை–வருக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கோ.த–ளபதி லட்டு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், துணைச் செய லாளர் ரமேஷ், மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ரமேஷ், வட்டச் செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம், டிப்போ ரவி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

    • லட்சுமி தீர்த்த குளத்தை ரூ.6.50 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • விரைவில் கும்பாபிஷேக பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    திருப்பரங்குன்றம்,

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம் மற்றும் கிரிவலம் பாதையை சுற்றிலும் லட்சுமி தீர்த்த குளம், சன்னியாசி கிணறு, சரவணப்பொய்கை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புனித தீர்த்த குளங்கள் மற்றும் கிணறுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மறைந்துவிட்ட நிலையில் தற்போது கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி தீர்த்தம், சன்னியாசி கிணறு, சரவணப் பொய்கை உள்ளிட்டவை இன்றளவும் மக்களால் புனித தீர்த்தமாக போற்றப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இங்கு வந்து இந்த புனித தீர்த்தங்களை பக்தர்கள் எடுத்துச் சென்று கும்பாபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதே போல கோவில் வளாகத்தில் அமைந்துள்ள லட்சுமி தீர்த்த குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இங்கு உள்ள மீன்கள் மச்ச முனிவரின் அவதாரமாக கருதப்படுகிறது. அதனால் பக்தர்கள் தங்கள் நோய் நொடிகள் தீர்வதற்காக கோவில் வளாகத்தில் அமைந்துள்ள லட்சுமி தீர்த்த குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு லட்சுமி தீர்த்த குளத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து 2019-2020-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழ தொடங்கின. இதனால் தீர்த்த குளத்தில் நிரம்பி இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    தொடர்ந்து குளத்தை சீரமைப்பதற்காக தற்போது வரை குளத்தில் தண்ணீர் சேமிக்கப்படுவதில்லை. அதனால் பக்தர்கள் இந்த குளம் பக்கம் செல்லவும் அனுமதி இல்லை.

    இந்த நிலையில் பக்தர்கள் தாங்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக லட்சுமி தீர்த்த குளத்தை சரி செய்து மீண்டும் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் திருப்பரங்குன்றம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான லட்சுமி தீர்த்தக்குளம் சீர் செய்தல், சஷ்டி மண்டபம் அமைத்தல், வாகன காப்பகம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் லட்சுமி தீர்த்த குளம் ரூ.6.50 கோடியில் சீரமைக்க கோவில் நிர்வாகம் திட்ட மதிப்பீடு செய்தது.

    பின்னர் அதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையத்திற்கு ஒப்பு தலுக்காக அனுப்பி வைத்தது. அதற்கு இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துவிட்டது. ஆனால் தொழில்நுட்ப பிரிவு இன்னும் அனுமதி வழங்கவில்லை. விரைவில் அதற்கான அனுமதி பெறப்பட்டு லட்சுமி தீர்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடங்கும் என கோவில் நிர்வாகம் தெரி வித்துள்ளது. திருப்பரங் குன்றம் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷே கம் நடைபெற்ற நிலையில் விரைவில் கும்பாபிஷேக பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    ×