என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.11 கோடி மதிப்பீட்டில் லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு
- ரூ.11 கோடி மதிப்பீட்டில் லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு பணி தொடங்கியது.
- மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ரமேஷ், வட்டச் செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம், டிப்போ ரவி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிர–மணியசாமி கோவில் சிதிலம் அடைந்த லட்சுமி தீர்த்தம், புதிய சஷ்டி மண்ட–பம் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதனை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அறுபடை வீடுகளுள் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சவாமி கோவில் வளாகத்தில் லட்சுமி தீர்த்தம் அமைந்துள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த–ததால் அதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து திருப்பரங் குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் அதனை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட் டது. இதேபோல சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்க–ளுக்கு சஷ்டி மண்டபம் கட்டவும் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட் டது.
இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின், கடந்த கூட்டத் தொடரில் சட்டப்பேரவை–யில் சஷ்டி மண்டபம் அமைக்க ரூ.4.50 கோடியும், லட்சுமி சீரமைக்க ரூ.6.50 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதன் அடிப்படையில் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு பணி மற்றும் சஷ்டி மண்ட–பம் கட்டுமான பணிகளை ரூ.11 கோடி மதிப்பீட்டில் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோவில் திருவாச்சி மண்ட–பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி–யில் மதுரை வடக்கு சட்ட–மன்ற உறுப்பினர் தளபதி, மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், இந்து சமய அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, திருப்பரங் குன்றம் கோவில் துணை ஆணையாளர் சுரேஷ், ஸ்தா–னிகப்பட்டர்கள் சுவாமி–நாதன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பக்தர்கள் அனை–வருக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கோ.த–ளபதி லட்டு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், துணைச் செய லாளர் ரமேஷ், மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ரமேஷ், வட்டச் செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம், டிப்போ ரவி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்