search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் கடை கட்ட பூமி பூஜை"

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், காமராஜ்நகரில் ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார்.

    நகர செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ரேசன் கடை கட்ட பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    மேலும் அதே பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒ.ஜோதி எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் மார்க்கெட் பகுதி, செய்யாறு பஸ் நிலையம், ஆரணி கூட்டு சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, கூல்ட்ரிங்ஸ், மோர் ஆகியவை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சம்பத், லோகநாதன், பார்த்திபன், சின்னதுரை, அண்ணாதுரை, கார்த்திகேயன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விராலிபட்டி ஊராட்சியில ரேசன் கடை, சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை போன்றவை மேம்பாடு செய்யவும் பூமிபூஜை நடந்தது.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் பா.விராலிப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம், பண்ணைப் பட்டி சமத்துவ மயானத்தில் காத்திருப்போர்கூடம், மயான கூடம், சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை போன்றவை மேம்பாடு செய்யவும்பூமிபூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தார். விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்திட்டப் பணிகளை பொக்லைன் மூலம் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துப்பாண்டி,ஊர் பிரமுகர்கள் வரதராஜன், நரசிம்மன், ஊராட்சி செயலாளர் கண்ணன்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    ×