என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரேசன் அரிசி பறிமுதல்"
- நடுபட்டறை பகுதியில் தாசில்தார் சோதனை
- நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைப்பு
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த நடுபட்டரை கிராம பகுதியில் இருந்து தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் தாசில்தார் சம்பத் உத்தரவின் ேபரில் வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையில் வருவாய்த் துறையினர், நடுபட்டறை பகுதிக்குச் சென்று அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுடுகாடு முட்புதரில் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்து வதற்காக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி சுமார் 2100 கிலோ டன் கைப்பற்றினர்.
மேலும் கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை வாணியம்பாடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
- திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரேசன் அரிசி மூட்டையுடன் பதுங்கி இருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.
- ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்தி தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஏ.கே. பிரீத் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் ரேசன் அரிசி மூட்டையுடன் பதுங்கி இருந்த கும்பல் போலீசாரை கண்டதும் மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 35 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ரேசன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் திருவள்ளூர் வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாவிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்தி தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
- வடமாநிலத்தவர்களுக்கு அதிகளவில் விற்பதற்காக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
- 2 வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 3.25 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களுக்கு அதிகளவில் விற்பதற்காக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தி வருபவர்களை மடக்கி பிடித்து அவர்களை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் இன்று அதிகாலை கோபிசெட்டிபாளையம் அடுத்த ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 வாகனங்கள் வந்தன. அந்த வாகனங்களை சோதனை செய்தபோது அதில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நம்பியூரை சேர்ந்த பிரசாந்த் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் 2 வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 3.25 டன் (3,250 கிலோ) ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து பிரசாந்த்திடம் குடிமைப் பொருள் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்