search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி.

    2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • நடுபட்டறை பகுதியில் தாசில்தார் சோதனை
    • நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைப்பு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த நடுபட்டரை கிராம பகுதியில் இருந்து தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் தாசில்தார் சம்பத் உத்தரவின் ேபரில் வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையில் வருவாய்த் துறையினர், நடுபட்டறை பகுதிக்குச் சென்று அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சுடுகாடு முட்புதரில் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்து வதற்காக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி சுமார் 2100 கிலோ டன் கைப்பற்றினர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை வாணியம்பாடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×