search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் அடிபட்டு பலி"

    • பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மந்திர மூர்த்தி (வயது29). இவரும், இவரது நண்பர் செல்வ மாரியப்பன் என்பவரும் கடந்த 24-ந்தேதி இரவு கோவில்பட்டி வசந்த் நகர் பகுதியில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்நிலையில் போதையில் இருந்த மந்திர மூர்த்தியும், அவரது நண்பர் செல்வ மாரியப்பனும் ரெயில் முன்பு செல்பி எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது இருவரும் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். இதில் மந்திர மூர்த்தி படுகாயம் அடைந்துள்ளார். செல்வ மாரியப்பன் லேசான காயம் அடைந்துள்ளார்.

    அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். படுகாயம் அடைந்த மந்திர மூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலியான சாமிநாதனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 34). இவர் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆவார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நாகாத்தாள். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் நாகாத்தாள் பழனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சாமிநாதன் தோப்புபட்டிக்கு வந்தார். பின்னர் மீண்டும் திருவள்ளூர் செல்வதற்காக அவர் புறப்பட்டார். ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தபோது மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விரைவு ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். ரெயில் என்ஜினில் சிக்கிக் கொண்ட அவரை டிரைவர் கவனித்து கோவிலூரை அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியில் ரெயிலை நிறுத்தினார்.

    ரெயில்வே இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பலியான சாமிநாதனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் ரெயில் போக்குவரத்து தாமதமானது. இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×