search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட்டேரி ஏரி"

    • பறவைகள் தங்கும் வகையில் இந்த ஏரிக்குள் 3 செயற்கை தீவுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
    • வற்றாத ரெட்டேரி ஏரியில் எப்போதும் நீர் இருந்ததால் சுற்றி உள்ள குடியிருப்புகளில் 80 அடி முதல் 200 அடி வரை போர் போடப்பட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

    கொளத்தூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, போரூர், ரெட்டேரி ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்கள்தொகை, தொழிற்சாலைகளுக்கிடையே கோடைகாலங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் அரசுக்கு சற்று சிரமம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் பஞ்சத்தை தீர்க்க நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கொளத்தூர் அருகே உள்ள ரெட்டேரி தண்ணீரை சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 400 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த ஏரியில் சுமார் 30 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு இருந்து வருகிறது. இதை விரிவுபடுத்தும் வகையில் ரூ.44.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஏரியை ஆழப்படுத்தி கூடுதலாக 13 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு ஏற்படுத்தி மொத்தமாக 43.15 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரியாக மாற்றப்பட உள்ளது. ஏரியில் இருந்து அகற்றப்படும் வண்டல் மண்ணை பயன்படுத்தி கரை அமைத்து பொதுமக்களுக்கு நடைபயிற்சிக்கான பாதை மற்றும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. பறவைகள் தங்கும் வகையில் இந்த ஏரிக்குள் 3 செயற்கை தீவுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் என்றுமே வற்றாத நிலையில் இருந்த இந்த ஏரியில் தற்போது நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு ஆழப்படுத்தும் பணி வேகமான நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே ரெட்டேரி ஏரியை ஆதாரமாகக் கொண்டு அதைச் சுற்றியுள்ள செகரட்டரியேட் காலனி, அன்பழகன் நகர், எட்டியப்பன் நகர் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கும் குடும்பங்கள் போர் மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

    வற்றாத ரெட்டேரி ஏரியில் எப்போதும் நீர் இருந்ததால் சுற்றி உள்ள குடியிருப்புகளில் 80 அடி முதல் 200 அடி வரை போர் போடப்பட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது ஏரியில் தண்ணீர் இல்லாததால் ஏரியை சுற்றியுள்ள அனைத்து குடியிருப்பு வாசிகளும் நிலத்தடி நீர் இல்லாமல் தண்ணீருக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே போர் போட்ட நிலையில் மீண்டும் அவர்கள் வீட்டின் வளாகத்தில் வேறு ஒரு இடத்தில் 300 அடி முதல் 400 அடி வரை பள்ளம் தோண்டி போர் போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே அப்பகுதியில் கூடுதலாக குடிநீர் தொட்டி அமைத்து லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் மேலும் ரெட்டேரி ஏரியில் நடைபெறும் ஆழப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ரெட்டேரி தண்ணீரை சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
    • ஏரியை ஆழப்படுத்திய பின்னர் மொத்த கொள்ளளவு 43.15 மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும்.

    கொளத்தூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த ஏரிகளில் இருந்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் கோடை காலங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கொளத்தூர் அருகே உள்ள ரெட்டேரி தண்ணீரை சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ரெட்டேரி ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இந்த ஏரி சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ரெட்டேரி ஏரியை மேம்படுத்தி கூடுதல் தண்ணீரை சேமித்துவைத்து அதனை குடிநீருக்கு பயன்படுத்த பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.43.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    ஏரியை ஆழப்படுத்திய பின்னர் மொத்த கொள்ளளவு 43.15 மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும். இது முந்தைய கொள்ளவை விட 13 மில்லியன் கனஅடி அதிகம் ஆகும். ரெட்டேரியை மேம்படுத்தும் வகையில் அதனை சுற்றி கரைகளும் அமைக்கப்பட உள்ளன. நீர்நிலையில் இருந்து அகற்றப்படும் வண்டல் மண்ணை பயன்படுத்தி ரெட்டேரி சந்திப்பில் இருந்து 3 கி.மீ தூரம் வரை கரைகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும். மேலும் பறவைகள் தங்கும் வகையில் ஏரியில் 3 செயற்கைத் தீவுகளும் உருவாக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ரெட்டேரி ஏரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து அனுப்பும் வகையில் உள்கட்டமைப்புகள் உள்ளன.

    புழல் ஏரியின் உபரிநீர்ப்பாதையில் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் பணிகள் முடிந்து உள்ளன. ஜி.என்.டி. சாலையின் இருபுறமும் ஏரிக்கரை பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. கூவம் ஆற்றின் ஓரத்தில் கட்டப்படும் சுற்றுச்சுவர் அங்கு குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் அமையும். மேலும் ஏரிக்கரையை குறைந்தது 3 அடிக்கு ஆழமாக்கி தூர்வாரப்படும். இதன் மூலம 6 முதல் 7 லட்சம் கனமீட்டர் வண்டல் மண் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதவரத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சுமார் 20 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் விரைவில் அகற்றப்படும் என்றார்.

    இதுகுறித்து ரெட்டேரி பகுதி மக்கள் கூறும்போது, ரெட்டேரி ஏரியில் தண்ணீர் என்றுமே வற்றியது கிடையாது. வருடம் முழுவதும் இங்கு தண்ணீர் இருக்கும். இந்த மிகப்பெரிய ஏரியை நீர்வளத்துறை அதிகாரிகள், குடிநீர் ஆதாரமாக மட்டும் பயன்படுத்தாமல் ரெட்டேரியை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைத்து படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்து சுற்றுலா மையம் அமைக்கலாம். மேலும் ஏரியை ஒட்டி உள்ள லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. மாதவரம் மண்டல அதிகாரிகள் இதனை அகற்றி வந்தாலும் அடுத்த 2 நாட்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது என்றனர்.

    • ரெட்டேரி சுமார் 280 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது.
    • புழல், செம்பரம்பாக்கம் தண்ணீர் சுத்திகரித்து அனுப்பப்படுகிறது.

    கொளத்தூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த ஏரிகளில் இருந்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் கோடை காலங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    இதற்கு மாற்று ஏற்பாடாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஏரி,குளங்களில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கொளத்தூர் அருகே உள்ள ரெட்டேரி தண்ணீரை சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த ரூ.22 கோடியில் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ரெட்டேரி சுமார் 280 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இங்கிருந்து தண்ணீரை சுத்திகரித்து திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது. தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் ரெட்டேரி தண்ணீர் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதுவரை ஏரிதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட வில்லை என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு புழல், செம்பரம்பாக்கம் தண்ணீர் சுத்திகரித்து அனுப்பப்படுகிறது. தற்போது ரெட்டேரி தண்ணீரை சுத்திகரித்து அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    மேலும் ரெட்டேரி ஏரியை மேம்படுத்த ரூ.43 கோடி திட்டப்பணியை நீர்வளத்துறை மேற்கொள்ள உள்ளது. இதில் ஏரியின் கொள்ளளவை 102 மில்லியன் கனஅடியில் இருந்து 133 மில்லியன் கனஅடியாக ஆக உயர்த்தி ஆழப்படுத்துதல், மாதவரம் ரவுண்டானா அருகே ஏரியை சுற்றி 3.6 கி.மீட்டர் கரைகள் மற்றும் 1 கி.மீட்டர் தூரத்திற்கு சுவர் கட்டுதல், 23 ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும். இந்த பணி முடிய சுமார் ஒன்றரை ஆண்டு ஆகும் என்றார்.

    • அதிகரித்து வரும் மக்கள் தொகையால் கோடைகாலங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
    • ரெட்டேரி ஏரி தண்ணீரை சென்னையில் குடிநீருக்கு பயன்படுத்த ரூ.22 கோடியில் திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    கொளத்தூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் இருந்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    அதிகரித்து வரும் மக்கள் தொகையால் கோடைகாலங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஏற்கனவே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரை குடிநீருக்கு சுத்திகரித்து பயன்படுத்த குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கொளத்தூர் அருகே உள்ள ரெட்டேரி ஏரி தண்ணீரை சென்னையில் குடிநீருக்கு பயன்படுத்த ரூ.22 கோடியில் திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    ரெட்டேரி ஏரி சுமார் 280 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த ஏரியில் 133 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தண்ணீரை சுத்திகரித்து அனுப்ப கொளத்தூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்தி கரிக்கும் வகையில் இது அமைய உள்ளது. இதற்காக ரெட்டேரி ஏரியில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீரை கொண்டு வர 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

    இன்னும் ஒரு மாதத்தில் இந்த சுத்திகரிப்பு நிலையம் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரூர் ஏரிக்குப் பிறகு, ரெட்டேரி ஏரியில் இருந்து நகருக்கு குடிநீர் வினியோ கிக்கும் வசதிகளை குடிநீர் வாரியம் மேம்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, `2019-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது மாற்று ஏற்பாடாக ரெட்டேரி ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டது. போரூர் ஏரியின் அடிப்படையில் ரெட்டேரி ஏரியை குடிநீர் ஆதாரமாக மாற்ற சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து ரூ.22 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    கொளத்தூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட்டேரி தண்ணீர் அனுப்பப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பே ரெட்டேரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தண்ணீர் மாதிரிகளை அவ்வப்போது பரிசோதித்த போது நீரின் தரம் மேம்பட்டு இருந்தது என்றனர்.

    ×