search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநதி"

    • ஊராட்சி செயலர்களுக்கு நிர்வாகம் சம்பந்தமாக அடிக்கடி கூட்டம் வைப்பதால் ஊராட்சி நிர்வாகம் பாதிக்கப்படுகிறது.
    • ராமநதி, கடனாநதி ஆறுகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் தலைவர் டி.கே. பாண்டியன் தலைமையில் செயலாளர் பூமிநாத் முன்னிலையில் நடைபெற்றது.

    பஞ்சாயத்து தலைவர்கள் ஏ.பி. நாடானூர் அழகுதுரை, பொட்டல்புதூர் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், மேலஆம்பூர் ஊராட்சி குயிலி லட்சுமணன், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன் மற்றும் ரவணசமுத்திரம் முகமது உசேன், தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேம ராதா ஜெயம், பாப்பான்குளம் முருகன் கீழ ஆம்பூர் மாரிசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு நிர்வாகம் சம்பந்தமாக அடிக்கடி கூட்டம் வைப்பதால் ஊராட்சி நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. கடையம் பகுதிகளில் குளங்கள், கால்வாய்கள் மடைகள் போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும், ராமநதியில் இருந்து இரண்டாத்துமுக்கு வரை செங்கல் சூளையில் உள்ள மோட்டார்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்க முடியும். ராமநதி, கடனாநதி ஆறுகளில் உள்ள சீமை கருவேல மரங்களையும், புதர் செடிகளையும் அகற்ற வேண்டும். தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கடனா அணையில் இருந்தும் கார் சாகுபடிக்காக தண்ணீரை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார்.
    • நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை 110 நாட்களுக்கு கடனாநதி அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கடையம்:

    தென்காசி மாவட்டத்தின் பிரதான அணைகளான கடனாநதி மற்றும் ராமநதி அணைகள் மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

    அணை திறப்பு

    மாவட்டத்தில் கார் சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால் ராமநதி அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கடனா அணையில் இருந்தும் கார் சாகுபடிக்காக தண்ணீரை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார்.

    இதன் மூலம் கடனாநதி அணை பாசனத்திற்கு உட்பட்ட அரசபத்து, வடகுறுவப்பத்து, ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர் கால், காங்கேயன்கால் ஆகியவை மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    9923 ஏக்கர்

    வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை 110 நாட்களுக்கு கடனாநதி அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி வீதம் 664.60 கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 9923 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்.

    நிகழ்ச்சியில் சட்டமன்ற திட்ட மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்பி. ராஜா, உறுப்பினர்கள் சதன் திருமலை குமார், ஷா நவாஸ், ராஜ்குமார், பழனி நாடார் எம்.எல்.ஏ., கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ்மாயவன், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் முருகேசன், ராஜேந்திரன், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×