search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் சாகுபடி"

    • கடனா அணையில் இருந்தும் கார் சாகுபடிக்காக தண்ணீரை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார்.
    • நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை 110 நாட்களுக்கு கடனாநதி அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கடையம்:

    தென்காசி மாவட்டத்தின் பிரதான அணைகளான கடனாநதி மற்றும் ராமநதி அணைகள் மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

    அணை திறப்பு

    மாவட்டத்தில் கார் சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால் ராமநதி அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கடனா அணையில் இருந்தும் கார் சாகுபடிக்காக தண்ணீரை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார்.

    இதன் மூலம் கடனாநதி அணை பாசனத்திற்கு உட்பட்ட அரசபத்து, வடகுறுவப்பத்து, ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர் கால், காங்கேயன்கால் ஆகியவை மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    9923 ஏக்கர்

    வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை 110 நாட்களுக்கு கடனாநதி அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி வீதம் 664.60 கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 9923 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்.

    நிகழ்ச்சியில் சட்டமன்ற திட்ட மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்பி. ராஜா, உறுப்பினர்கள் சதன் திருமலை குமார், ஷா நவாஸ், ராஜ்குமார், பழனி நாடார் எம்.எல்.ஏ., கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ்மாயவன், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் முருகேசன், ராஜேந்திரன், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாசனத்திற்காக ராமநதி அணையை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • இன்று காலை அணையில் இருந்து இன்று முதல் வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை 110 நாட்களுக்கு தன்ணீர் திறக்கப்படுகிறது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமநதி அணை உள்ளது. மொத்தம் 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இன்று காலை நிலவரப்படி 81.50 அடி நீர் இருப்பு உள்ளது.

    தண்ணீர் திறப்பு

    அணை நிரம்புவதற்கு இன்னும் 2.50 அடி நீரே தேவை என்பதால் பாசனத்திற்காக நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி இன்று காலை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் பாசன கால்வாய்களான வடகால், தென்கால் மற்றும் பாப்பன்கால் ஆகியவற்றின் வழியாக நேரடி பாசன நிலங்களுக்கு கார் சாகுபடி செய்வதற்கு இன்று முதல் வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை 110 நாட்களுக்கு தன்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த நாட்களில் தினந்தோறும் வினாடிக்கு 60 கன அடி வீதம் 168.03 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் தென்காசி வட்டத்தில் 1008.19 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    ×