search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராட்சத குழாய்"

    • சிங்கம்புணரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ராட்சத குழாயில் மோதியது.
    • பலூன் வெளிவந்ததால் டிரைவர் உயிர் தப்பினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 36). வாடகை கார் டிரைவர்.

    காரைக்குடியில் இருந்து இவர் காரில் சவாரி ஏற்றிக்கொண்டு கோவை சென்று விட்டு மீண்டும் காரைக்குடி நோக்கி திரும்பி கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிலநீர்பட்டி பிரிவில் இரவில் வந்த போது வளைவான சாலையில் கார் வேகமாக திரும்பியது.

    அப்போது கட்டுப்பா ட்டை இழந்த கார் சாலையோரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக போடப்பட்டிருந்த ராட்சத இரும்பு குழாய் மீது மோதியது.

    இதில் காரின் என்ஜின் பகுதி நொறுங்கியது. கார் வேகமாக மோதியதால் டிரைவர் சீட்டின் முன்பகுதியில் இருந்த பலூன் வெளி வந்தது. இதன் காரணமாக காரை ஓட்டிய செந்தில்முருகன் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    ×