search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "giant pipe"

    • ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்கிறது.
    • சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழி சாலையில் உள்ள மணலூரில் குழாய் விரிசல் காரணமாக தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    மணலூர் வைகை ஆற்றுப்படுகையில் திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு ராட்சத மோட்டார்கள் மூலம் தினமும் மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீரேற்று நிலையம் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

    ஊழியர்கள் மரகுச்சிகளை வைத்து சரி செய்தனர். தற்போது குடி நீரேற்று நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மீண்டும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பனை மர உயரத்திற்கு தண்ணீர் வெளியேறியது. நான்கு வழிச்சாலையை ஒட்டி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறியதை பார்த்து பொது மக்கள் மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    மதியம் 2 மணியில் இருந்து 4 மணி வரை தண்ணீர் வீணாக வெளியேறியது. அதன்பின் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. கோடை காலம் என்பதால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வீணாகியதாக தெரிகிறது.

    கோடை உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிங்கம்புணரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ராட்சத குழாயில் மோதியது.
    • பலூன் வெளிவந்ததால் டிரைவர் உயிர் தப்பினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 36). வாடகை கார் டிரைவர்.

    காரைக்குடியில் இருந்து இவர் காரில் சவாரி ஏற்றிக்கொண்டு கோவை சென்று விட்டு மீண்டும் காரைக்குடி நோக்கி திரும்பி கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிலநீர்பட்டி பிரிவில் இரவில் வந்த போது வளைவான சாலையில் கார் வேகமாக திரும்பியது.

    அப்போது கட்டுப்பா ட்டை இழந்த கார் சாலையோரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக போடப்பட்டிருந்த ராட்சத இரும்பு குழாய் மீது மோதியது.

    இதில் காரின் என்ஜின் பகுதி நொறுங்கியது. கார் வேகமாக மோதியதால் டிரைவர் சீட்டின் முன்பகுதியில் இருந்த பலூன் வெளி வந்தது. இதன் காரணமாக காரை ஓட்டிய செந்தில்முருகன் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    ×