search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜினாமா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
    • பீகார் சட்டசபை இன்று காலை கூடியது.

    பாட்னா:

    பீகாரில் பா.ஜனதாவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் முறித்தார். அவர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியானார்.

    நிதிஷ்குமார் அரசும் இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    இதற்காக பீகார் சட்டசபை இன்று காலை கூடியது. பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்கா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதாவை சேர்ந்த அவர் பதவி விலகியதோடு அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.

    இதற்கு மந்திரி விஜய் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமாகியது.

    • அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
    • கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு.

    மங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் கவுடா. இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீநிவாஸ் கவுடா கழுதை பண்ணை திறப்பதற்காக தனது ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார்.

    தற்போது, மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார் கழுதை பண்ணை உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் கவுடா.

    இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் கவுடா கூறியதாவது:-

    நான் முன்பு 2020-ம் ஆண்டு வரை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இது இந்தியாவிலும் கர்நாடகாவிலும் உள்ள முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஆகும்.

     தற்போது எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. நான் சுமார் 42 லட்சம் ரூபாய் மூதலீடு செய்துள்ளேன். அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. கழுதைப்பால் பல நன்மைகள் கொண்ட மருந்தாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக முன்னாள் கால்பந்து வீரர் ஷினேடின் ஷிடேன் அறிவித்துள்ளார். #ZinedineZidane #RealMadrid
    உலகின் மிகச்சிறந்த கால்பந்து அணியாக ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணி திகழ்ந்து வருகிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கால்பந்து வீரர் ஷினேடின் ஷிடேன் 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக மூன்று சாம்பியன்ஸ் கோப்பைகளை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியது. லா லிகா தொடரிலும் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. இதற்கு ஷிடேன் முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்நிலையில், ஷிடேன் தனது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய ஷிடேன், பதவியிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் விலகுவது தான் அனைவருக்கும் நல்லது.


    இது என்னுடைய முடிவு. நான் தலைமை பயிற்சியாளர் பதவியை மேலும் நீட்டிக்க இருந்தது உண்மை தான். அது என்னுடைய தவறு. அணியில் மாற்றம் தேவைப்படுகிறது. இது தான் சரியான நேரம். ஷிடேயின் முடிவு பலருகு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிடேன் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. #ZinedineZidane #RealMadrid
    ×