search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவி சங்கர் பிரசாத்"

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.
    • இன்று மதியம் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    ஐந்து மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க ரேவந்த் ரெட்டிதான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அவரை காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் களம் இறக்கியது. கமாரெட்டி தொகுதியில் தோல்வியடைந்தார். மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

    ரேவந்த் ரெட்டியை முதலமைச்சராக தேர்வு செய்ய கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் கட்சி மேலிடம் அவரை முதலமைச்சராக தேர்வு செய்தது. இன்று மதியம் அவர் தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகை சந்திப்பின்போது, உங்களுடைய டி.என்.ஏ.-வை காங்கிரஸ் டி.என்.ஏ-வாக பார்க்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரேவந்த் ரெட்டி என்னுடைய டி.என்.ஏ.-வை தெலுங்கானா டி.என்.ஏ.-வாக பார்க்கிறேன் என்றார்.

    மேலும், சந்திரசேகர ராவ் குறித்து பேசும்போது "சந்திரசேகர ராவின் டி.என்.ஏ. பீகாரைச் சேர்ந்தது, அவரின் சாதி குர்மி. குர்மிஸ் பீகாரில் இருந்து வந்தவர்கள். பீகாரில் இருந்து விஜயநகரம் குடிபெயர்ந்து பின்னர் அங்கிருந்து தெலுங்கானா வந்தனர். என்னுடைய டி.என்.ஏ. தெலுங்காவில் இருந்து வந்தது. என்னுடைய டி.என்.ஏ. தெலுங்கானா. அது பீகார் டி.என்.ஏ.-வை விட சிறந்தது" என்றார்.

    அவர் எம்.பி.யாக இருக்கும்போது இதுகுறித்து பெரியதாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கானா களத்தில் சந்திரசேகர ராவை தோற்கடித்து, முதலமைச்சர் பதவிக்கு அவர் பெயர் அடிபட்ட நிலையில் தூசி தட்டி எடுக்கப்பட்டு விமர்சனம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் "டி.என்.ஏ. குறித்து ரேவந்த் ரெட்டி கூறிய கருத்து பொறுப்பற்றது. வெட்கக்கேடானது. தெலுங்கானா டி.என்.ஏ.-வை விட பீகார் டி.என்.ஏ. பலவீனமானதா?.

    நாட்டை பிளவுப்படுத்தும் வகையிலான இநத் கருத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காப்பது ஏன்?. ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    • மெகா கூட்டணியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பிற்பகல் பதவியேற்பு.
    • ஆதரவு கொடுத்தற்காக சோனியா, ராகுலுக்கு, நிதிஷ்குமார் நன்றி.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக பாஜகவின் சுஷில் குமார் மோடியும் பதவியேற்றனர்.

    அண்மை காலமாக இரு கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலவதாக நேற்று நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர்,  ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.

    இதனையடுத்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மகா பந்தன் எனப்படும் மெகா கூட்டணியை அமைத்தன. பாட்னாவில் நடைபெற்ற இந்த கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும்  வழங்கினார். இந்நிலையில் இன்று பிற்பகல் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதலமைச்சராக 8-வது முறை பதவியேற்கிறார். 


    துணை முதலமைச்சராக லாலுபிரசாத் யாதவ் மகனும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்கிறார். இதனிடையே, தமக்கு ஆதரவு அளித்ததற்காக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசிய நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்த பாஜக அல்லாத அரசை ஆதரிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பீகாரில் அரசியலில் ஒரே நாளில் ஏற்பட்ட இந்த மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் முடிவை பாஜக கடுமையாக சாடி உள்ளது. 


    பீகார் மக்கள் பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சிக்கே வாக்களித்ததாகவும், ஆனால் மக்களின் ஆணையை நிதீஷ் குமார் மதிக்கவில்லை என்றும், பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

    ஐக்கிய ஜனதாதளத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது என்ற நிதிஷ்குமாரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக அவரை பலமுறை பீகார் முதலமைச்சராக்கியதும் என்றும் தெரிவித்தார்.

    பாஜகவுடன் இருந்தபோது நிதிஷ்குமாருக்கு கிடைத்த மரியாதை இனிமேல் ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் இருந்து கிடைக்காது என பாஜகவை சேர்ந்த சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.


    பீகாரில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தும், அவரை முதல்வராக்கினோம் என்றும், அவரது கட்சியை உடைக்க நாங்கள் முயன்றதில்லை, எங்களுக்கு துரோகம் செய்தவர்களின் கட்சிகளை மட்டுமே உடைத்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண் பாஜகவில் இன்று இணைந்துள்ளார். #CongressSpokesperson #TomvadakkanJoinsBJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண்  இன்று காலை  மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்தின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.



    இது குறித்து டாம் வடக்கண் கூறியிருப்பதாவது:

    புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் கருத்து ஏற்புடையதல்ல. காங்கிரசின் கருத்து நாட்டு நலனுக்கு எதிரானது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானேன். கட்சிக்காக நான் 20 ஆண்டுகளாக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஆனால், இப்போது என்னை தூக்கி எறிகிறார்கள். பரம்பரை அரசியல் காங்கிரஸில் உச்சத்தினை பெற்றுள்ளது.  இதன் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என பிரதமர் மோடியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த டாம் வடக்கண் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் விலகியது கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    பாஜகவில் இணைந்த டாம் வடக்கண்ணிற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், கேரளாவில் சீட் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CongressSpokesperson #TomvadakkanJoinsBJP
    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்கக் கோரி சட்ட மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார். #SC #CJI #DipakMisra
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவருக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக நியமிக்க உள்ளவரை பரிந்துரைக்க வேண்டும் என தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.

    தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த நிலையில் நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி ஊடகங்களை சந்தித்த நீதிபதிகளில் கோகோயும் ஒருவர். இதனால், அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதில் எதேனும் சர்ச்சை நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி கலந்து ஆலோசித்த பின்னரே அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    ×