search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான் மாதம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
    • பிணைக்கைதிகளை விடுவிக்கா விட்டால் தாக்குதல் தீவிரமடையும் என்றார் அமைச்சர்

    கடந்த அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், தெற்கு இஸ்ரேல் பகுதியில் அதிரடியாக நுழைந்து பல இஸ்ரேலியர்களை கொன்று, பலரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவ படை (Israeli Defence Forces), ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் அவர்களை தேடித்தேடி அழித்து வருகிறது.

    130 நாட்களை கடந்து போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 28,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்தது.

    பிணைக்கைதிகளை விட வேண்டுமானால் நிரந்தர போர்நிறுத்தம் வேண்டும் என ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் போர்நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த இஸ்ரேல், பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு கெடு விதித்திருக்கிறது.

    இஸ்ரேலி கேபினெட் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) இது குறித்து தெரிவித்ததாவது:

    மார்ச் 10 அல்லது 11 காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் மாதம் தொடங்கும்.

    ரம்ஜான் தொடங்கும் முன் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கா விட்டால், பாலஸ்தீன ரஃபா (Rafah) பகுதியில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம்.

    அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் பேசவுள்ளோம்.

    இது தீவிரமான நடவடிக்கைதான்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு 2 வாய்ப்புகள் உள்ளன – அவர்கள் பிணைக்கைதிகளை விடுவித்து விட்டு சரணடையலாம். இதன் மூலம் காசா மக்களும் ரம்ஜான் கொண்டாட முடியும். இல்லையென்றால், தீவிர தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×