search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் நடால்"

    • உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • முன்னணி வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், இத்தாலி வீரர் சொனேகோவுடன் மோதினார். இதில் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு சுற்றில் கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் கிர்கியோசுடன் மோதினார். இதில் 6-7, 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார் கிர்கியோஸ். இதன்மூலம் விம்பிள்டன் தொடரில் இருந்து சிட்சிபாஸ் வெளியேறினார்.

    • நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார்.
    • முதல் சுற்றில் செரீனாவை வீழ்த்தி ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மிக உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர், ரபேல் நடால் - அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார். இறுதியில் 6-4,6-3,3-6,6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானை, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். 40 வயதான செரீனா காயம் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் 7-5 1-6 7-6 (10-7) என்ற செட்கணக்கில் ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.

    பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ரபேல் நடால் மற்றும் காஸ்பர் ரூட் ஆகியோர் விளையாடினர். வெற்றி பெற்ற பிரபல டென்னிஸ் வீரருக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட் ஆகியோர் விளையாடினர். போட்டியின் முடிவில் 6-3, 6-3, 6-0 என்ற புள்ளி கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றுள்ளார். இது நடாலின் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான 14-வது வெற்றியாகும். சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    ரபேல் நடால் - தனுஷ்

    ரபேல் நடால் - தனுஷ்

    இந்நிலையில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நாடாலுக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதனுடன் ரபேல் நடால் புகைப்படத்தையும் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
    • 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் நடால்

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    இதன்மூலம் 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன், இது அவருக்கு 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

    பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த வீரர் கேஸ்பருடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும், அவரது சாதனைகளுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடால் குறிப்பிட்டார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் காயம் காரணமாக நடப்பு சாம்பியன் ரபேல் நடால் பாதியிலேயே விலகியுள்ளார். #USOpen2018 #RafaelNadal
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) அரை இறுதியில் 3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோவை எதிர் கொண்டார்.

    முதல் செட்டில், நடால் மற்றும் டெல்போட்ரோ இடையே கடுமையான போட்டி நிலவியது, எனினும் 6-7 எனும் கணக்கில் நடால் போராடி இழந்தார்.

    இரண்டாவது செட்டின் பாதியில் திடீரென நடாலின் வலது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வலியால் அவதிப்பட்ட அவர், போட்டியை நிறுத்தி முதலுதவிக்காக பயிற்சியாளரை அழைத்தார். மைதானத்திலேயே பயிற்சியாளர் அவரது தசையில் டேப் சுற்றி இறுகிய தசைநாரை சரிப்படுத்த ஸ்ப்ரே அடித்து மசாஜ் செய்தார். 

    பின்னர் சில நிமிட இடைவேளைக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியதாக உணர்ந்த நடால், இரண்டாவது செட்டை தொடர்ந்தார். ஆனால் அபாரமாக விளையாடிய டெல்போட்ரோ 2-6 எனும் கணக்கில் எளிதில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.



    மூன்றாவது செட் தொடக்கத்திலேயே நடால் வலது காலில் மீண்டும் வலி ஏற்பட்டதால், போட்டியில் இருந்து விலகுவதாக நடுவரிடம் கூறினார். இதனால், டெல் போட்ரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர் இறுதிக்கு தகுதிபெற்றார். 

    நடப்பு சாம்பியனான நடால் போட்டியில் இருந்து விலகுவதாக கூறிய அந்த நிமிடம் ஆட்டம் நடைபெற்ற ஆர்த்தர் ஆஷே மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அனைவரிடமும் மயான அமைதி நிலவியது. 

    ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் போதும் காயம் காரணமாக நடால் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #RafaelNadal
    ×