search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த தான முகாம்"

    • தனியார் குடியிருப்பு சங்கம் சார்பில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஒசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பூனப்பள்ளியில், ஓசூர் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் குடியிருப்பு சங்கம் சார்பில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இதில்,போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஒசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகன், செங்குட்டுவன், துணை மேயர் ஆனந்தய்யா, ஒசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘சுதந்திர திருநாள் அமுத பெருவிழா’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பு ரத்த தான முகாம், நடைபெற்றது
    • முகாமில் 30 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'சுதந்திர திருநாள் அமுத பெருவிழா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பு ரத்த தான முகாம், கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    ரத்த தான முகாமிற்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த மைய மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, ரத்த வகை கண்டறிந்து குருதி தான சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    முகாமில் 30 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது ரத்த வகையை அறிந்து கொண்டனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர் ஆதிலட்சுமி செய்திருந்தார்.

    • ராஜேஸ்வரி விசுவநாதன் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது
    • 600-க்கும் மேற்பட்ட யூனிட் பெறப்பட்டது

    வேலூர், ஜூலை.30-

    வி.ஐ.டி.யில் ராஜேஸ்வரி விசுவநாதன் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு வி.ஐ.டி. இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் (யூத் ரெட் கிராஸ்) ரத்த தான முகாம் நடந்தது.

    ரத்த தான முகாமை வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார். வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன் சேகர் விசுவநாதன், இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆர்வமாக பங்கேற்று ரத்த தானம் செய்தனர். 600-க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

    வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் சி.எம்.சி., மேசோனிக் ரத்த வங்கி, ஸ்ரீ நாராயணி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மையம், ஆகிய மருத்துவ மனைகளில் உள்ள ரத்த வங்கிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நாம் தமிழர் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது
    • முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் திருச்செல்வம் தலைமையிலான குழு வினர் செய்திருந்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாம் தமிழர் கட்சி, இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவர் அருள் தலைமை தாங்கினார். மருத்துவர் அரவிந்த் முன்னிலை வைத்தார்.

    முகாமிற்கான அறிவிப்பை ஏற்றுக்கொண்ட ஏராளமானோர் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் திருச்செல்வம் தலைமையிலான குழு வினர் செய்திருந்தனர்.

    மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அருள் டாக்டர் அரவிந்த், சுகாதார ஆ ய்வாளர் திருச்செல்வம் உள்ளிட்ட குழுவினர் இந்த முகாம் மூலம் 30 நபர்களுக்கும் மேல் தானமாக அளித்த ரத்தத்தை பெற்றனர்.

    இதேபோல் பொதுமக்களிடையே ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும், தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்பதை மக்கள் உணர்ந்து பிறருக்கு உதவிட வேண்டும் என்றும் இந்த முகாமில் வலியுறுத்தப்பட்டது.

    • சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் விதமாக ரத்ததான முகாம் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
    • மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்துகொண்டு 27 யூனிட் இரத்தம் சேகரித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் விதமாக ரத்ததான முகாம் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை.முத்துராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

    ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.ராமு, குழந்தைகள் நல மருத்துவர் மகேஸ்வரி, மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்துகொண்டு 27 யூனிட் இரத்தம் சேகரித்தனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • லாலாபேட்டையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
    • எம்.எல்.ஏ. ரா.மாணிக்கம் தலைமை வகித்தார்

    கரூர்:

    தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடத்திய 3-வது ரத்த தான மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    குளித்தலை எம்.எல்.ஏ. ரா.மாணிக்கம் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் நிறைமதி முன்னிலை வகித்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய திமுக செயலாளர் உமாபதி, மருத்துவர் தர்மேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 38 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 4 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு இலவசமாக மருத்துவம் பார்க்க பரிந்துரை செய்யப்பட்டது. 

    ×