search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாலாபேட்டையில் ரத்த தான முகாம்
    X

    லாலாபேட்டையில் ரத்த தான முகாம்

    • லாலாபேட்டையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
    • எம்.எல்.ஏ. ரா.மாணிக்கம் தலைமை வகித்தார்

    கரூர்:

    தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடத்திய 3-வது ரத்த தான மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    குளித்தலை எம்.எல்.ஏ. ரா.மாணிக்கம் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் நிறைமதி முன்னிலை வகித்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய திமுக செயலாளர் உமாபதி, மருத்துவர் தர்மேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 38 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 4 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு இலவசமாக மருத்துவம் பார்க்க பரிந்துரை செய்யப்பட்டது.

    Next Story
    ×