search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைசூர் தசரா விழா"

    • அபிமன்யு என்ற யானை தலைமையில் யானைகள் மைசூர் வந்தடைந்தன.
    • மைசூர் அரண்மனை அர்ச்சகர்கள் பிரஹல்லாதராவ் தாண்டா சாளுவ துலா சுப லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை நடந்தது.

    மைசூர்:

    உலகப் புகழ்பெற்ற 413-வது மைசூர் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்கும் யானைகளுக்கு இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. மைசூர் மாவட்டப் பொறுப்பாளர் ஹெச்.சி.மகாதேவப்பா நாகர்ஹோலே பூங்காவின் பிரதான வாயிலான வீரனஹோசஹள்ளி அருகே அலங்கரிக்கப்பட்ட யானைகளின் முற்றங்களில் மலர்களை வைத்து தொடங்கி வைத்தார்.

    காலை 9.45 மணி முதல் 10.15 மணி வரை வீரனஹோசஹள்ளி கேட் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மைசூர் அரண்மனை அர்ச்சகர்கள் பிரஹல்லாதராவ் தாண்டா சாளுவ துலா சுப லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை நடந்தது.

    அபிமன்யு என்ற யானை தலைமையில் யானைகள் அர்ஜுனன், பீமா, கோபி, தனஞ்சய, வரலட்சுமி, விஜயா, மகேந்திரன், கஞ்சன் ஆகிய யானைகள் மைசூர் வந்தடைந்தன.

    இந்த நிகழ்ச்சியில் வனத்துறை மந்திரி ஈஸ்வர் காந்த்ரே, ஹுன்சூர் எம்எல்ஏ ஹரிஷ் கவுடா, மேயர் சிவக்குமார், கலெக்டர் டாக்டர் கே.வி.ராஜேந்திரா, வன அலுவலர் சவுரப்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×