search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலாண்மை கல்லூரி"

    • காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை பிரிவில் கோப்பையையும் வென்றன.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி "SKIMT MAGNATE 2023"-ஐ ஏற்பாடு செய்தது. இது மாணவர்கள் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறை யில் பங்கேற்கும் வகையில் கலப்பின முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    கல்லூரிச்செயலர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல சி.ஐ.ஐ. தலைவரும், பெனின்சுலார் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வா கப்பங்காளருமான ஜெய்சிங்வேர்கர் தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில், இன்று உலகம் பல நிலைத்தன்மை சிக்கல்களை எதிர்கொள்கிறது. நிலை யற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை, சிக்கலான தன்மை, தெளிவின்மை ஆகியவற்றின் கருத்தை விரிவுப டுத்தினார்.

    பங்கேற்பாளர்கள் மாற்றத்தை தழுவவும், நிச்சயமற்ற தன்மையை கண்காணிக்கவும், தெளிவாக தொடர்பு கொள்ளவும், சிக்கலான தன்மையைக் கடக்கமற்றும் தெளிவற்ற தகவலை புரிந்து கொள்ள சோதனைகளை செய்யவும்அறிவுறுத்தினார்.

    வணிக வினாடி-வினா, வணிகத்திட்டம், சிறந்த மேலாளர், கார்ப்பரேட் நடை, விளம்பரச்செயல், காகிதவிளக்கக்காட்சி மற்றும் சுவரொட்டி தயாரித்தல் ேபான்றவை நடந்தன.

    14 கல்லூரிகளை சேர்ந்த 249 மாணவ-மாணவிகள் பங்கேற்ற இந்த சந்திப்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதுநிலைப் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை யையும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை பிரிவில் கோப்பையையும் வென்றன.

    ×