search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students Meeting"

    • அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட வியல் துறை மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • கடந்த கால பசுமையான நிகழ்வுகளையும் மேலும் தற்போது தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதையும் எடுத்துக் கூறினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட வியல் துறை மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது இதற்கு கல்லூரி செயலாளர் அருட்சகோதரி ஏசு தங்கம் தலைமை தாங்கினார். முதல்வர் சவரிராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் திருமால் வரவேற்று பேசினார். இதில் கடந்த 1995-1998 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற அனைத்து துறை மாணவர்களும் கலந்து கொண்டு கடந்த கால பசுமையான நிகழ்வுகளையும் மேலும் தற்போது தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதையும் எடுத்துக் கூறினர்.

    இதில் முன்னாள் முதல்வர் சுந்தர மூர்த்தி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மிக சிறப்பாக செய்தார்.

    • ராஜபாளையம் அன்னப்ப ராஜா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கூட்டத்தில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நி லைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் பள்ளி செயலர் என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தை என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். 1964-ம் ஆண்டில் பள்ளியில் முதன்முதலில் சேர்ந்த மாணவர் முகுந்தராம்ராஜா வரவேற்று பேசினார்.

    தலைமையாசிரியர் ரமேஷ், முன்னாள் மாணவர் சங்க செயலர் சஞ்சய் குமார்ராஜா, என்.ஏ.ராமச்சந்திரராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முனைவர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்களான சேலம் பெரியார் பல்க லைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்து செழியன், ஐதராபாத் அட்வான்ஸ்டு சிஸ்டம் லேபரட்டிரியின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ராமகுரு, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீனிவாசன், கோவை அர்ஜூன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் டிரஸ்டி மற்றும் செயலர் சுரேஷ்குமார், மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி மணிகண்டன் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களிடம் சமூக அக்கறைமிக்க வினாக்கள் கேட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

    கூட்டத்தில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் மகேஸ் நன்றி கூறினார். கூட்ட ஏற்பா டுகளை முன்னாள் மாணவர் சங்கத்தின் தொடர்பு அலுவலர் இளைய பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை பிரிவில் கோப்பையையும் வென்றன.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி "SKIMT MAGNATE 2023"-ஐ ஏற்பாடு செய்தது. இது மாணவர்கள் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறை யில் பங்கேற்கும் வகையில் கலப்பின முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    கல்லூரிச்செயலர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல சி.ஐ.ஐ. தலைவரும், பெனின்சுலார் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வா கப்பங்காளருமான ஜெய்சிங்வேர்கர் தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில், இன்று உலகம் பல நிலைத்தன்மை சிக்கல்களை எதிர்கொள்கிறது. நிலை யற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை, சிக்கலான தன்மை, தெளிவின்மை ஆகியவற்றின் கருத்தை விரிவுப டுத்தினார்.

    பங்கேற்பாளர்கள் மாற்றத்தை தழுவவும், நிச்சயமற்ற தன்மையை கண்காணிக்கவும், தெளிவாக தொடர்பு கொள்ளவும், சிக்கலான தன்மையைக் கடக்கமற்றும் தெளிவற்ற தகவலை புரிந்து கொள்ள சோதனைகளை செய்யவும்அறிவுறுத்தினார்.

    வணிக வினாடி-வினா, வணிகத்திட்டம், சிறந்த மேலாளர், கார்ப்பரேட் நடை, விளம்பரச்செயல், காகிதவிளக்கக்காட்சி மற்றும் சுவரொட்டி தயாரித்தல் ேபான்றவை நடந்தன.

    14 கல்லூரிகளை சேர்ந்த 249 மாணவ-மாணவிகள் பங்கேற்ற இந்த சந்திப்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதுநிலைப் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை யையும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை பிரிவில் கோப்பையையும் வென்றன.

    ×