என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட வியல் துறை மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
- கடந்த கால பசுமையான நிகழ்வுகளையும் மேலும் தற்போது தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதையும் எடுத்துக் கூறினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட வியல் துறை மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது இதற்கு கல்லூரி செயலாளர் அருட்சகோதரி ஏசு தங்கம் தலைமை தாங்கினார். முதல்வர் சவரிராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் திருமால் வரவேற்று பேசினார். இதில் கடந்த 1995-1998 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற அனைத்து துறை மாணவர்களும் கலந்து கொண்டு கடந்த கால பசுமையான நிகழ்வுகளையும் மேலும் தற்போது தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதையும் எடுத்துக் கூறினர்.
இதில் முன்னாள் முதல்வர் சுந்தர மூர்த்தி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மிக சிறப்பாக செய்தார்.
Next Story






