search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    X

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

    • ராஜபாளையம் அன்னப்ப ராஜா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கூட்டத்தில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நி லைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் பள்ளி செயலர் என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தை என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். 1964-ம் ஆண்டில் பள்ளியில் முதன்முதலில் சேர்ந்த மாணவர் முகுந்தராம்ராஜா வரவேற்று பேசினார்.

    தலைமையாசிரியர் ரமேஷ், முன்னாள் மாணவர் சங்க செயலர் சஞ்சய் குமார்ராஜா, என்.ஏ.ராமச்சந்திரராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முனைவர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்களான சேலம் பெரியார் பல்க லைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்து செழியன், ஐதராபாத் அட்வான்ஸ்டு சிஸ்டம் லேபரட்டிரியின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ராமகுரு, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீனிவாசன், கோவை அர்ஜூன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் டிரஸ்டி மற்றும் செயலர் சுரேஷ்குமார், மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி மணிகண்டன் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களிடம் சமூக அக்கறைமிக்க வினாக்கள் கேட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

    கூட்டத்தில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் மகேஸ் நன்றி கூறினார். கூட்ட ஏற்பா டுகளை முன்னாள் மாணவர் சங்கத்தின் தொடர்பு அலுவலர் இளைய பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×