search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலசங்கரன்குழி"

    • புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மாயமான சுமங்கலாவை தேடி வருகிறார்.
    • வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றவர் மாலையில் வீடு திரும்பாததால் பதற்றம்.

    கன்னியாகுமரி:

    மேல சங்கரன்குழி அருகே உள்ள பெருஞ் செல்வவிளையை சேர்ந்த வர் ஜெகன் தொழி லாளி.

    இவரது மகள் சுமங்கலா (வயது22). இவர் திருவிதாங் கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. முதுகலை பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை சுமங்கலா வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

    ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு களில் தேடினர். ஆனால் சுமங்கலா பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    அவர் எங்கு சென்றார் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஜெகன் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மாயமான சுமங்கலாவை தேடி வருகிறார்.

    • மின்கம்பம் 2 துண்டாக முறிந்தது
    • போலீசார் காரை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நேற்று இரவு 9 மணி அளவில் காரில் புறப்பட்டுள் ளார். அவர் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்றார். நாகர்கோவில் நோக்கி அந்தக் கார் சென்றுள்ளது.அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார், மேல சங்கரன்குழி சந்திப்பில் இருந்த மின்கம்ப த்தில் மோதியது.

    இதில் மின்கம்பம் 2 துண்டாக முறிந்து சேத மடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இரவு முதல் தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டது. இதற்கிடையில் காரை ஒட்டி வந்தவர் சிறுகா யங்களுடன் தப்பி ஒடி விட்டார். போலீசார் காரை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ×