search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெயின்புரி இடைத்தேர்தல்"

    • அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதி எம்.பி. பதவி வகித்து வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், கடந்த மாதம் 10-ம் தேதி மரணமடைந்தார். இதனால் அவரது தொகுதி காலியாக உள்ளது.

    அந்த மக்களவை தொகுதிக்கும், 5 மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, மெயின்புரி எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் (44), சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், டிம்பிள் யாதவ் தனது கணவர் அகிலேஷ் யாதவுடன் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அதன்பின் அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சிக்கு மெயின்புரி மக்களின் ஆசிகள் என்றும் உண்டு என தெரிவித்தார்.

    மாமனார் மறைந்த முலாயம் சிங் யாதவின் பாரம்பரியத்தை அங்கு தொடருகிற விதத்தில் அவரது மருமகளுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

    • அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ்.
    • இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

    லக்னோ :

    உ.பி.யில் மெயின்புரி தொகுதி எம்.பி. பதவி வகித்து வந்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், கடந்த மாதம் 10-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் அவரது தொகுதி காலியாக உள்ளது. அந்த மக்களவை தொகுதிக்கும், 5 மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    மெயின்புரி எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் (வயது 44), சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    அவர் தனது வேட்பு மனுவை இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார் என மெயின்புரி மாவட்ட சமாஜ்வாடி கட்சித்தலைவர் அலோக் ஷாக்யா தெரிவித்தார்.

    தனது மாமனார் மறைந்த முலாயம் சிங் யாதவின் பாரம்பரியத்தை அங்கு தொடருகிற விதத்தில் அவரது மருமகளுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 2019 தேர்தலில் இந்தத் தொகுதியில் முலாயம் சிங் யாதவ், தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் பிரேம் சிங் ஷாக்யாவை 94 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 12.13 லட்சம் வாக்காளர்களில் 35 சதவீதத்தினர் யாதவ் சமூகத்தினர், எஞ்சியவர்கள் ஷாக்யா, தாக்குர், பிராமணர்கள், தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆவார்கள்.

    இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை. முலாயம் சிங் யாதவின் இன்னொரு மருமகளான அபர்ணா யாதவை பா.ஜ.க. நிறுத்தக்கூடும் என ஊகங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிவபால் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாடி லோகியா ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனவா, இல்லையா என்பது பற்றி தகவல் இல்லை.

    டிம்பிள் யாதவ், கடந்த முறை கன்னாஜ் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ.க. வேட்பாளர் சுப்ரத் பதக்கிடம் தோல்வி அடைந்தது நினைவுகூரத்தக்கது.

    டிம்பிள் யாதவ், முலாயம் சிங் யாதவுக்கு ஈடானவர் அல்ல, முலாயம் சிங் யாதவ் வானம் என்றால், டிம்பிள் யாதவ் பூமி. இங்கு பா.ஜ.க. வெற்றி பெறும் என மாநில பா.ஜ.க. மந்திரி ஜெய்வீர் சிங் தெரிவித்தார்.

    ×