search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூளையை சுறுசுறுப்பாக்கும்"

    • நியூரான்களில் பிரீரேடிக்கல்களின் உருவாக்கத்தை அதிகரிக்கும்.
    • மூளையின் செயல்திறனையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும்.

    மூளை செயல்திறன் குறைபாடு, அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படுவதற்கு ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் நரம்புகளில் உண்டாகும் அழற்சி ஆகியவை முக்கிய காரணமாகும்.

    'அமிலாய்டு பீட்டா' புரதம் என்ற மூலக் கூறு. நியூரான்களில் பிரீரேடிக்கல்களின் உருவாக்கத்தை அதிகரிக்கும். இது மூளையில் ஆக்சிஜனேற்ற சேதம் மற்றும் செல்களின் இறப்புக்கு வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வால்நட் பருப்பில் ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக்கொண்ட பல மூலக்கூறுகள் உள்ளன. எனவே வால்நட் பருப்புகளை கூடு தலாக உணவில் சேர்த்துக்கொண்டால் மூளையின் செயல்திறனையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும்.

    வால்நட்டில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் ஆக்சிஜனேற்ற பாதுகாப்பை மேம்படுத்தும். பிரி ரேடிக்கல்களின் அளவு, புரத ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும். தினமும் வால்நட் சாப்பிடுவதன் மூலம் பார்கின்சன் நோய். பக்கவாதம். மனச்சோர்வு. இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்க முடியும்.

    ×