search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூட கலெக்டர்"

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:- வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×