search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லை பெரியாறு அணை"

    • பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • நீர் இருப்பு 6093 மி.கன அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரமாக கனமழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.

    எனவே நீர் மட்டம் 136 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முதல் மழை குறையத் தொடங்கியது. இதனால் அணையின் நீர் வரத்தும் குறைந்தது.

    8000 கன அடி வரை நீர் வரத்து வந்த நிலையில் இன்று காலை அணைக்கு 2543 கன அடி மட்டுமே நீர் வருகிறது. நீர் மட்டம் 135.90 அடியாக உள்ளது. இதனால் இன்று மாலை அல்லது நாளை அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6093 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணை நீர் மட்டம் 57.74 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 1789 கன அடியாக உள்ளது. திறப்பு 969 கன அடி. இருப்பு 3183 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 49.25 அடியாக உள்ளது. வரத்து 10 கன அடி. இருப்பு 325.42 மி.கன அடி.

    சோத்துப்பாறை நீர் மட்டம் 69.20 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இருப்பு 29.40 மி.கன அடி.

    பெரியாறு 4.2, தேக்கடி 3, உத்தமபாளையம் 2.6, வைகை அணை 7, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 55.91 அடியாக உள்ளது. அணைக்கு 1544 கன அடி நீர் வருகிறது.
    • அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 969 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 2122 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3266 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை வினாடிக்கு 2738 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 128.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 129.05 அடியாக உயர்ந்தது. இன்று காலை 129.50 அடியாக அதிகரித்துள்ளது. 152 அடி உயரம் உள்ள பெரியாறு அணையில் தற்போது 4590 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1678 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் லோயர்கேம்பில் உள்ள பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 4 ஜெனரேட்டர்கள் மூலம் 153 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 55.91 அடியாக உள்ளது. அணைக்கு 1544 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 969 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2865 மி.கன அடியாக உள்ளது.

    126.28 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 74.29 அடியாக உள்ளது. அணையில் இருந்து 6 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது.

    பெரியாறு 26.4, தேக்கடி 13, கூடலூர் 2.8, உத்தமபாளையம் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், 2018ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வக்கீல் ரசல் ஜோய் இது போன்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறார்.
    • தற்போது லட்சக்கணக்கில் வசூல் செய்து ஆவணப்படம் எடுக்க முயல்வதாக வெளிவந்துள்ள செய்தி தமிழக, கேரள, மாநில விவசாயிகளிடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நபர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை பலம் இழந்து காணப்படுவதாக தொடர்ந்து கேரள அரசு மற்றும் பல்வேறு அமைப்பினர் பிரசாரங்கள் செய்து வந்த நிலையில் கடந்த 2006 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அணை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்தது.

    இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த வக்கீல் ரசல் ஜோய் பொய் பிரசாரம் செய்து வருகிறார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் பெரியாறு அணைக்கு எதிரான இந்த பிரசாரமும் தொடங்கியுள்ளது. இடுக்கி, பத்தினம் திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்நிறுத்தி வக்கீல் ரசல் ஜோய் தலைமையிலான "சேவ் கேரளா பிரிகேட்" என் அமைப்பினர் 10 லட்சம் கையெழுத்து பெற்று பிரதமர் மோடிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

    மேலும் முல்லைப்பெரியாற்றின் விபரங்கள் குறித்து 90 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாக உள்ள இந்த குறும்படம் தயாரிக்க ரூ.30 லட்சம் தேவை என்றும் தங்களுக்கு நன்கொடை வழங்குமாறும் மார்ட்டின் ஜோசப் மற்றும் ரசல் ஜோய் ஆகிய இருவரின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். இது தமிழக விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், 2018ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வக்கீல் ரசல் ஜோய் இது போன்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறார். தற்போது லட்சக்கணக்கில் வசூல் செய்து ஆவணப்படம் எடுக்க முயல்வதாக வெளிவந்துள்ள செய்தி தமிழக, கேரள, மாநில விவசாயிகளிடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.

    கேரள அரசு இது போன்ற விஷம பிரசாரங்களை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு இது போன்ற சூழல் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் கேரள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செய்யப்படும் பிரசாரத்துக்கு அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும். தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) இதில் தலையிட்டு இது போன்ற பிரசாரங்களை தடுக்க வேண்டும். தவறினால் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன் சோலை ஆகிய தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி நாங்களும் கையெழுத்து இயக்கத்தை தொடங்குவோம் என்றார்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியாக உள்ளது. நேற்று 265 கன அடி மட்டுமே வந்த நிலையில் இன்று காலை 700 அடியாக அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4266 மி.கன அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது.

    தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியகுளம், வீரபாண்டி, கூடலூர், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பத்தின் தாக்கமும் அடியோடு குறைந்தது. தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியாக உள்ளது. நேற்று 265 கன அடி மட்டுமே வந்த நிலையில் இன்று காலை 700 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4266 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 52.82 அடியாக உள்ளது. நேற்று 447 கன அடி நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து 608 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் திறப்பு 869 கனஅடி. இருப்பு 2384 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49 அடி. வரத்து 20 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 83.64 அடி. திறப்பு 6 கன அடி.

    பெரியாறு 15.4, தேக்கடி 16, கூடலூர் 8.4, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 2, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
    முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அணையின் உறுதி குறித்து விமர்சனம் செய்து வரும் கேரளா அரசு 142 அடி தண்ணீர் வரை தேக்க முடியாது என்று கூறி வருகிறது. ஆனால், தமிழக அரசு 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கும் முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.

    இதற்கிடையே, பருவமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க, 139 அடி நிரம்பியதும் தமிழக அதிகாரிகள் அனுமதியுடன் கேரள அரசு அணையை திறந்தது. தமிழக அதிகாரிகள் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாது அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இந்தநிலையில் அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

    பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை வலுப்படுத்த அங்குள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை. இதற்கு முதலில் அனுமதி அளித்த கேரள அரசு பின்னர் எதிர்ப்பு கிளம்பியதால், தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்திறப்பு, பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழக கட்டுப்பாட்டிலே உள்ளது.
    ×