search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்துராமலிங்கத்தேவர்"

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரத்தில் நிரந்தர மேற்கூரையை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
    • முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் மற்றும் கமுதி வட்டத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் விழாவை–யொட்டி மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டப்பணி களை பார்வையிடுதல் மற் றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அமைச்சர் பங்கேற்பு

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன், ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப் பினர் முருகேசன் முன்னி லையில் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் புதிய திட்டப்பணிகளை பார்வையிட்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத் தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச் சர் ராஜகண்ணப்பன் பர மக்குடி வட்டம், பார்த்திப னூர் பகுதியில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையிலி ருந்து கமுதி புறவழிச்சாலை ரூ.35.24 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியினை பார்வை யிட்டு, நாளை (30.10.2023) பசும்பொனில் நடைபெறு கின்ற பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பொதுமக்க ளுக்கு பயன்பெறும் வகை யில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன், இந்த புறவழிச்சாலையின் மூலம் பசும்பொன்னிற்கு வரக்கூடியவர்கள் பார்த்தி பனூர் நகர் பகுதிக்குள் வராமலும் எந்த ஒரு இடையூ றுமின்றி பசும்பொன் செல் வதற்கு ஏதுவாக பயனுள்ள தாக இருக்கும் என தெரி வித்தார்.

    பின்னர் அபிராமம் அருகே உள்ள மார்னிங் ஸ்டார் பெண்கல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணி கள் நிழற்குடை மற்றும் பசும்பொன்னில் முதுகுளத் தூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட் டப்பட்ட பயணிகள் நிழற்கு டையினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் சென்று வரும் வழியில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் நிரந் தர மேற்கூரை அமைக்கப் பட்டுள்ளதை அமைச்சர் திறந்து வைத்தார்.

    பின்னர் பசும்பொன்னில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுப்புறத் தார்சா லையினை பார்வையிட்ட துடன், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மருத் துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளை போதியளவு அமைத்து செயல்படுத்திட வேண்டுமென அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரெத்தினசாமி, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், பேரூராட்சி உதவி இயக்குநர் ராஜா, கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ் செல்வி, கமுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வாசு தேவன், வட்டாட்சியர் சேது ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    ×