search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவா்"

    • தங்கவேலுக்கு கண்பாா்வை குறைபாடு மற்றும் உடல்நலக்குறைபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.
    • மங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    மங்கலம் :

    திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள கிடாத்துறைப்புதூரை சோ்ந்தவா் தங்கவேல் ( வயது 80). இவருக்கு கண்பாா்வை குறைபாடு மற்றும் உடல்நலக்குறைபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற தங்கவேல் அதன் பின் வீடு திரும்பவில்லையாம்.

    இதையடுத்து, உறவினா்கள் தேடியபோது அந்தப் பகுதியில் உள்ள பாறைக்குழியில் தங்கவேல் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    மேலும் தங்கவேல் பாறைக்குழியில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

    • முதியவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
    • மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனா்.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே நாகரசுநல்லூா் பிரிவு பகுதியில் கடந்த 25 ந் தேதி இரவு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயங்களுடன் கிடந்த முதியவரை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து ஊதியூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் இறந்த முதியவர் யார் , எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×