search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வருக்கு"

    • தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தின்படி ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையம் வந்தார்.
    • சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    சேலம்:

    'தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தின்படி ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையம் வந்தார். முதல்-அமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின்தனிப்பிரிவு செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் உடன் வந்தனர். விமான நிலையம் முன்பு காவல்துறை சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் கள ஆய்வில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து காரில் புறப்பட்டு சேலம் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    ×