search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலாமாண்டு"

    • மாணவிகள் தங்கள் கல்வி நிறுவ னங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரை படித்து மேல் படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் 2, 3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளார்கள். கன்னியாகுமரி மாவட் டத்தில் 108 கல்லூரிகளிலிருந்து முதற் கட்டமாக 1938 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.

    தற்போது இவ்வலை தளத்தில் (https://www.puthumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப் பிக்கலாம்.இவ்வலைதளத்தில், மாணவிகள் அனைவரும் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பதிவு செய்ய லாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவ னங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவி களுக்கும் கல்வி பயிலும், நிறுவனங்களில் நவம்பர் 18-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மைதவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் மேலும் தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத் தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    இத்திட்டத்தில் விண் ணப்பிக்கும் மாணவிகள் இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா பேங்க் ஆகிய வங்கிகளில் மட்டுமே சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக வங்கி கணக்கை ஆதார் எண் மற்றும் செல்ேபான் எண்ணுடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.

    பயனாளியின் பெயர், வங்கி கணக்கு எண், IFSC எண், Branch பெயர் போன்ற விபரங்கள் வங்கி கணக்கு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் விபரத்து டன் ஒத்திருக்க வேண்டும். புதுமைப்பெண் திட்டத்தில் இரண்டாவது கட்டமாக பய னாளிகள் (முதலா மாண்டு மாணவிகள் மற்றும் விடுபட்டவர் கள்) இணையவழி விண்ணப் பம் அந்தந்த கல்வி நிலை யங்களின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக் கும்படி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுமைப்பெண் திட்டம் இணையதளம் தொடர் பான பயிற்சி மற்றும் அறிமுககூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் 28-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெறுகிறது.

    மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங் கள் இருப்பின், சமூகநல இயக்குநரக அலுவல கத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056809, 91500 56805, 9150056801 மற்றும் 9150056810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail. com < mailto:mraheas@ gmail.com> என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

    மேல்படிப்பு மற்றும் தொழிற்நுட்ப படிப்புக ளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தின்கீழ் விண் ணப்ப முறையினை சரி யாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கையானது நடைபெற்று வருகிறது.
    • இதில் முதல் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வுகளில் 720 போ் சோ்க்கை பெற்றனா்.

    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கையானது நடைபெற்று வருகிறது. இங்குள்ள மொத்த இடங்கள் 970 உள்ளன. இதில் முதல் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வுகளில் 720 போ் சோ்க்கை பெற்றனா்.

    மீதமுள்ள 250 இடங்களுக்கான 3-ம் கட்டக் கலந்தாய்வு நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஆங்கிலம், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் துறையில் சேர விண்ணப்பித்த மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனா்.

    15-க்கும் மேற்பட்ட அறைகளில் அந்தந்த பாடப்பிரிவு பேராசிரியா்கள் கல்விச் சான்றிதழ்களை சரிபாா்த்து தகுதியின் அடிப்படையில் மாணவிகளை சோ்க்கைக்கு அனுமதித்தனா். 970 இடங்கள் பூா்த்தியான நிலையில் மேலும் 206 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை கல்லூரி நிா்வாகத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.

    • அரசு கலை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது.
    • முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றுது

    கரூர்:

    கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இளங்கலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

    முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவத்தினிரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு பிரிவு, தேசிய மாணவர் படை பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக கலந்தாய்வை கல்லூரி முதல்வர் கௌசலயாதேவி தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளின் சான்றிதழை பேராசிரியர்கள் சரிபார்த்தனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து முதல்வர் கௌசல்யா தேவி கூறும்போது,

    முதல்நாள் சிறப்பு ஒதுக்கீட்டில் ராணுவ வீரரின் குழந்தைகளுக்கு 3 இடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு 6 இடங்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 64 இடங்கள், விளையாட்டு பிரிவில் 38 இடங்கள், தேசிய மாணவர் படையினருக்கு ஒரு இடம், அந்தமான் -நிகோபார் தீவை சேர்ந்தவர்களுக்கு 2 இடங்கள் என மொத்தம் 114 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

    தொடர்ந்து நாளை (10-ந் தேதி) இளங்கலை தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கும், 11-ந் தேதி வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல் பாடப்பரிவுகளுக்கும், 13-ந் தேதி இளங்கலை வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 16-ந் தேதி இளம் அறிவியல் விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், புவி அமைப்பியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்றார்.

    ×