search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In college"

    • அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கையானது நடைபெற்று வருகிறது.
    • இதில் முதல் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வுகளில் 720 போ் சோ்க்கை பெற்றனா்.

    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கையானது நடைபெற்று வருகிறது. இங்குள்ள மொத்த இடங்கள் 970 உள்ளன. இதில் முதல் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வுகளில் 720 போ் சோ்க்கை பெற்றனா்.

    மீதமுள்ள 250 இடங்களுக்கான 3-ம் கட்டக் கலந்தாய்வு நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஆங்கிலம், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் துறையில் சேர விண்ணப்பித்த மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனா்.

    15-க்கும் மேற்பட்ட அறைகளில் அந்தந்த பாடப்பிரிவு பேராசிரியா்கள் கல்விச் சான்றிதழ்களை சரிபாா்த்து தகுதியின் அடிப்படையில் மாணவிகளை சோ்க்கைக்கு அனுமதித்தனா். 970 இடங்கள் பூா்த்தியான நிலையில் மேலும் 206 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை கல்லூரி நிா்வாகத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.

    • குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வானது நாளை தொடங்குகிறது.
    • இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணையதளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வானது நாளை தொடங்குகிறது.

    நாளை காலை 9.30 மணியளவில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) காலை 9:30 மணியளவில் பொதுப்பிரிவு மாணவர்க–ளுக்கும் நடைபெறவுள்ளது.

    இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணையதளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் மூலமும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இணைய வழியில் பதிவு செய்த சிறப்பு ஒதுக்கீடு கோரும் மாணாக்கர்கள் நாளையும், பொதுப்பிரிவு மாணாக்கர்கள் 5-ந் தேதியும், தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுங்கள். அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×