search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை விலை உயர்வு"

    • முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • பண்ணையில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்ததால் சில்லரை விற்பனையிலும் முட்டை விலை எகிறியுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு அவற்றிலிருந்து தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    முட்டை நுகர்வை பொருத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் கடந்த 12 நாட்களில் பண்ணையில் முட்டை கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட 2 வார காலத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி (பைசாவில்) 480காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6-ம் தேதி 485 காசாகவும், 9-ந் தேதி 490 காசு, 11-ந்தேதி 495 காசு, 13-ந்தேதி 505 காசு, 16-ந் தேதி 510 காசு, 23-ந் தேதி 520 காசு, 25-ந் தேதி 535 காசு, 26-ந்தேதி 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பண்ணையில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்ததால் சில்லரை விற்பனையிலும் முட்டை விலை எகிறியுள்ளது. அந்த வகையில் சில்லரை கடைகளில் முட்டை ஒன்றின் விலை ரூ.6 முதல் 6.50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள், இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த 4 மாதங்களில் மட்டும் தீவன மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 5 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்து 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்காரணமாகவே முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • முட்டைக்கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு முட்டை உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • பல்வேறு காரணங்களால் விலை உயர்வு கட்டாயமாகிறது.

    மடத்துக்குளம் :

    முட்டைகளில் கோழிமுட்டை, வாத்துமுட்டை, காடைமுட்டை, வான்கோழிமுட்டை என பல வகை முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் கோழிமுட்டை அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இதில் பண்ணைக்கோழி முட்டைகளை விட நாட்டுக்கோழி முட்டைக்கு கூடுதல் மவுசு உண்டு. ஆனாலும் விலை அதிகம் என்பதாலும் உற்பத்தி குறைவு என்பதாலும் நாட்டுக்கோழி முட்டைகளின் பயன்பாடு குறைந்த அளவிலேயே உள்ளது.

    திருப்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பல இடங்களில் முட்டைக்கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு முட்டை உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீப காலங்களாக முட்டை விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் ரூ.3.65-க்கு விற்பனையான முட்டையின் விலை தற்போது ரூ.5-ஐக் கடந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.5.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை உயர்வு குறித்து முட்டை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- பொதுவாக கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். அந்த நேரத்தில் ராட்சத மின் விசிறிகள் அமைத்தும் ஈர சாக்குகளைத் தொங்க விட்டும் கோழிகளை வெப்பத்திலிருந்து பாதுகாப்போம். ஆனாலும் வெப்பத்தின் தாக்கத்தால் கோழிகளின் முட்டையிடும் திறன் குறையும். இதனால் முட்டை உற்பத்தி குறைந்து விலையேற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். தற்போது தீவனங்களுக்கான செலவு மற்றும் டீசல் விலை உயர்வால் அதிகரித்திருக்கும் போக்குவரத்துச் செலவு, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வு கட்டாயமாகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் நாமக்கல் மண்டலத்தில் நிர்ணயிக்கப்படும் முட்டை விலையை அடிப்படையாகக் கொண்டே மற்ற பகுதிகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×