search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது கான் அசாக்ஜாய்"

    • நவாஸ் ஷெரீப்- பிலாவல் இணைந்து கூட்டு வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரியை நிறுத்தியுள்ளனர்.
    • இம்ரான் கான் தற்போது தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.

    பாகிஸ்தானில் கடந்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நவாஸ் ஷெரீப் கட்சியும், பிலாவல் பூட்டோ கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடைபெற்ற போதிலும் இதுவரை அரசு அமைக்கப்படவில்லை.

    நவாஸ் ஷெரீப்- பிலாவல் கட்சிகளின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக இம்ரான் கான் முகமது கான் அசாக்ஜாய்-ஐ அவரது கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

    முகமது கான் அசாக்ஜாய் பஸ்துன்-க்வா மிலி-அவாமி கட்சியின் தலைவர் ஆவார். சன்னி இத்தேஹாட் கவுன்சில் ஆதரவு பெற்றவர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், அதிபர் தேர்தலில் முகமது கான் அசாக்ஜாய்க்கு வாக்களிக்கும்படி தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி மார்ச் 9-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்தாரி இன்று வேட்புமனு தாக்கல் இருக்கிறார்.

    தற்போது அதிபராக இருக்கும் ஆரிப் அல்வியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், அரசியல் அசாதார சூழ்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.

    பாகிஸ்தான் தேர்தல் விதிப்படி பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட் மற்றும் நான்கு மாகாண உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானர்கள்.

    ×