search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க.ஸ்டாலின் பங்கேற்பு"

    • முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • பசும்பொன்னில் வருகிற 28-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும் பொன் கிராமத்தில் முத்து ராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா இந்த மாதம் 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் மிகச் சிறப் பாக நடைபெறுகிறது.

    அக்டோபர் 28-ந்தேதி தேவரின் ஆன்மீக விழாவா கவும், 29-ந்தேதி அரசியல் விழாவாகவும், 30-ந்தேதி குருபூஜை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவில் சிவாச்சா ரியார்கள் தெய்வ புராணங் களை பாடி தேவரின் நாமத்தை போற்றி பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து தேவன பக்தர் கள் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    29-ந்தேதி தேவரின் அர சியல் மிக சிறப்பாக நடை பெறும். அன்று அகில இந்திய பார்வர்டு கட்சியின் சார்பில் தேவர் ஆற்றிய பணிகளைப் பற்றியும், ஆன் மிக விழாவை பற்றியும் சொற்பொழிவு நடைபெ றும். 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறும். இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அனைத்து அரசி யல் கட்சியின் உடைய தலைவர் பெருமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப் பாக ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது. 30-ந்தேதி நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உட்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கி றார்கள்.

    அதேபோல் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக் கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி, ஒ.எஸ்.மணியன் உள்பட நிர்வாகிக ளும், ஓ.பி.எஸ். அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், தஞ்சை அறிவுடை நம்பி, ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலா ளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோ, மாவட்ட செயலா ளர் வி.கே.சுரேஷ்,

    காங்கிரஸ் சார்பில் தமி ழகத் தலைவர் கே.எஸ்.அழ கிரி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மண்டபம் ஜி.முனியசாமி, மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முதுகுளத் தூர் முருகன் உள்பட அனைத்து அரசியல் தலை வர்களும் வருகை தந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பசும்பொன் னில் தேவர் நினைவாக பொறுப்பாளர் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, ஹெலி காப்டர் தளம், பக்தர்கள் வந்து செல்லும் இடங்கள் உள்பட அனைத்தையும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவி ரமாக செய்து வருகி றார்கள். விழா ஏற்பாடுகளை நினை வாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், தங்க வேல் ராமச்சந்திரன் உட்பட பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

    ×