search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி தடைகாலம்"

    • மீனவர்கள் தடை உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
    • மீனவர்கள் இந்த தடைக்காலத்தில் வலைகள் மற்றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

    அமராவதி:

    ஆந்திர அரசு வங்காள விரிகுடா கடலில், மாநில பிராந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க 2 மாத காலம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தள்ளது. இறால் உள்ளிட்ட மீன் இனங்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (61 நாட்கள்) 2 மாத காலம் இந்த தடை அமல்படுத்தப்படும். இந்த ஆண்டும் இதற்கான தடை உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மீனவர்கள் வரும் 15-ந்தேதி முதல் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாது.

    "மீனவர்கள் தடை உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். தடையை மீறி மீன்பிடிப்பவர்கள் மீது அதிக அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    மீனவர்கள், இந்த தடைக்காலத்தில் வலைகள் மற்றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

    • எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.
    • மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவொற்றியூர்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த தடை மே மாதம் 30-ந் தேதி வரை 45 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதுவரை எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.

    இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தங்கள் மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பார்கள். மீன் பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து குறையும். எனவே மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1200 விசைப்படகுகள் உள்ளன. நேற்று மீன்பிடி தடை காலத்துக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வியாபாரிகள், மீன்பிரியர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன்விலையும் அதிகரித்து இருந்தது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, வருகிற 15-ந்தேதி முதல் மீன்படி தடைகாலம் அமலுக்கு வருகிறது. இந்த காலத்தில் படகுகளை சீரமைப்போம். ஆழ்கடலுக்குள் மீனவர்கள் செல்லமாட்டார்கள் என்பதால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வருவது குறைந்துவிடும் என்றனர்.

    • விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகள் திரண்டனர்.
    • 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 14ம் தேதி நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பினர். பெருத்த எதிர்பார்ப்புடன் சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்காததால், ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

    ஏராளமான விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் காலை முதல் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகளும், மீன் பிரியர்களும் திரண்டனர். வழக்கமாக அதிகமாக கிடைக்ககூடிய வாவல், வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்ததாகவும், மீன்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக 700 ரூபாய்க்கு விற்பனையான நண்டு மற்றும் இறால் 600 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம், வாவள் 600 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 200 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனையான விலை மீன்கள் 250 ரூபாய்க்கும், கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கனவா 340 ரூபாய்க்கும், நாகை துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    2 லட்சம் முதல் 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், பிடித்து வரப்பட்ட மீன்கள் செலவினங்களை ஈடுகட்டவே சரியாக இருக்கும் என வேதனை தெரிவித்தனர்.

    ×