search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி தடைகாலம்"

    • வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
    • சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.

    ராயபுரம்:

    ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை

    விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.

    மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று 100 பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினார்கள். இதனால் காசிமேட்டுக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.

    இந்நிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க இன்று காலையில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பெரிய மீன்கள் எதுவும் இல்லாததால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    மேலும் விலையை பொருத்தவரை சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.400-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், கவளை மீன் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.

    • வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.
    • இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். விசை படகுகள், மீன்வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங் களை சீரமைக்கும் பணியில மீனவர்கள் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இது வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.

    மீன்பிடி தடைகாலம் தொடங்கும் நிலையில் இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின.

    இதனால் கடந்த வாரத்தை விட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    கடந்த வாரத்தில் ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.800-க்கு விற்கப்பட்டது. கடமா எப்போதும் விற்கப்படும் விலையை விட ரூ.200 வரை குறைத்து விற்கப்பட்டும் அதனை வாங்க ஆட்கள் இல்லை.

    இதனால் வார இறுதி நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மார்க்கெட் இன்று வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால் இன்னும் 2 மாதத்திற்கு இதே நிலைதான் இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.


    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடமா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகால் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிவிட்டனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் இங்குள்ள மீன் விற்பனை கூடம் இனி 1 ½ மாதத்திற்கு வெறிச்சோடி கிடக்கும். அதே நேரம் கடலுக்கு செல்ல கட்டுமரங்கள், பைபர் படகுகளுக்கு தடை இல்லை என்பதால் அவர்கள் கடற் கரை யோரத்தில் மீன் பிடித்து திரும்பி விடுவார்கள். இதனால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை அதிகமாகும் என்றனர்.

    • தடைகாலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க மத்திய-மாநில அரசுகள் தடை விதித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தடை காலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். சிலர் குடும்ப சூழ்நிலை கருதி வேறு வேலைகளுக்கும் சென்றனர்.

    இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நேற்று இரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து பாம்பன் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.

    தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்வதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என பாம்பன் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக ராமேசுவரத்தை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும், இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. எனவே மீன் பிடிப்பதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதன் காரணமாக தடைகாலம் முடிந்த நிலையிலும் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் ராமேசுவரம் மீனவர்களுக்கு இன்று வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனினும் கடல் காற்று குறைந்து 17-ந்தேதி இயல்புநிலை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினத்தில் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • விசைப்படகுகளில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி போன்றவற்றை பொருத்தி சென்றனர். வலைகளை பழுது நீக்கி மீனவர்கள் படகில் ஆர்வமுடன் ஏற்றி சென்றனர்.
    • தடைக்காலத்திற்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் சென்று உள்ளனர்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி மீன்களின் இனப்பெருக்க காலத்தை கணக்கில் கொண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலில் மீன் பிடிக்க விசை படகுகளுக்கு தடை விதிக்கப்படும். இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.

    இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகளில் புறப்பட்டு சென்றனர்.

    அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்.

    நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்குச் சென்றனர். நாகை துறைமுகத்தில் இருந்து 100-க்கணக்கான விசைப்படகுகளுக்கு பூஜை செய்தும், கடலை வழிபட்டும் பின்னர் சென்றனர். இயந்திரம் பழுது நீக்கம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டி புது பொலிவுடன் படகுகள் சென்றன.

    விசைப்படகுகளில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி போன்றவற்றை பொருத்தி சென்றனர். வலைகளை பழுது நீக்கி படகில் ஆர்வமுடன் ஏற்றி சென்றனர்.

    தடைக்காலத்திற்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் சென்று உள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • படகுகளில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பும் பணி இன்று நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. அந்தக் காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க தடைக்காலமாகும். அதன்படி இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி (இன்று) வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தினார்கள். கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

    இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள். அந்தப் படகுகளில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பும் பணி இன்று நடைபெற்றது. மேலும் விசைப்படகுகளில் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை ஏற்றும் பணியும் நடந்தது. சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன் பிடிக்கச் செல்ல தயாராக நிற்கும் விசைப்படகுகளில் டீசல் நிரப்பி வருகிறார்கள்.

    மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களைப் பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ்கட்டிகளை நிரப்பி வருகிறார்கள். இதனால் துறைமுகம் களைகட்டி காணப்படுகிறது.

    நாளை (15-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. நாளை ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

    நாளை அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இந்த விசைப்படகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். அப்போது சீலா, வஞ்சிரம், நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொழுவை, நெடுவா, திருக்கை, நவரை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இவற்றை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இன்றே சின்னமுட்டம் துறைமுகம் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    • மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் இன்று வரை 61 நாட்கள் அமலில் உள்ளது.
    • மீன்பிடி தடைகாலம் முடிவடைவதால் இன்று நள்ளிரவே கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் இன்று (14-ந்தேதி) வரை 61 நாட்கள் அமலில் உள்ளது.

    இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைவதால் வழக்கமான உற்சாகத்துடன் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் செல்ல தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் 1100 விசைப்படகுகள், 1500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    மீன்பிடி தடைகாலம் முடிவடைவதால் இன்று நள்ளிரவே கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து படகுகளில் ஐஸ்கட்டி, வலை, டீசல், ஒரு வாரத்துக்கு தேவையான உணவுகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதி 61 நாட்கள் தடைகாலத்திற்கு பின்னர் மீண்டும் சுறுசுறுப்பு அடைந்து உள்ளது. விசைப்படகுகளில் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் குறைந்தது ஒருவாரத்திற்கு பின்னரே கரை திரும்புவார்கள். எனவே அடுத்த வாரம் முதல் காசிமேட்டில் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், விலையும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும்.
    • இன்று நள்ளிரவு முதல் கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில், மீன்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் 52 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

    இந்த நாட்களில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

    இதைதொடர்ந்து, நீண்ட கரை, தங்கசேரி, அழிக்கல் உட்பட மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலில் இருந்து கரை திரும்பினர். அவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியுள்ளனர்.

    • தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது.
    • விசைப்படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கருதி நாளை முதல் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளோம்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. எனவே விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக சென்னை மீன்பிடி துறைமுக விசைப்படகு சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    விசைப்படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கருதி நாளை முதல் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளோம். அரசால் தடை செய்யப்பட்ட கசார் இன மீன்களை பிடிக்க அனுமதி கிடையாது. இதை மீறும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மீன்பிடி தடை கால நாட்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, புதிய வலைகளை பின்னுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
    • விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த காலங்களில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன் படிப்பதற்கு அனுமதியில்லை. இந்த காலங்களில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும். நாட்டு படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடைகாலம் பொருந்தாது. வழக்கம் போல் அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

    இந்த ஆண்டு தடைகாலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தடை காலத்தையொட்டி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று நள்ளிரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோநகர், தெர்மல்நகர், புன்னைக்காயல், மணப்பாடு, பெரிதாழை உள்பட மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். தடை காலம் தொடங்கியதால் அவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    மீன்பிடி தடை கால நாட்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, புதிய வலைகளை பின்னுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகுகள் மூலமாக மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூந்தங்குழி, பஞ்சல், தோமையார்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் 2 ஆயிரம் நாட்டு படகுகளில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் நாட்டு படகுகளில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்களுக்கு தடைகாலம் பொருந்தாது.

    • சுருக்கு வலை, இரட்டை மடி வலை உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
    • மீனவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்ய முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கூறினர்.

    சீர்காழி:

    சுருக்குவலையை பயன்படுத்தி மீன்படிக்க அனுமதிக்கவேண்டும் என சுருக்குவலை ஆதரவு 18மீனவ கிராம பிரதிநிதிகள் சீர்காழி கோட்டாட்சியரிடம் அமைதி பேச்சுவார்த்தையின்போது செவ்வாய்கிழமை வலியுறுத்தினர்

    மீன்பிடி தடை காலம் செவ்வாய்கிழமை இரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வெள்ளைமணல் பூம்புகார் சின்னுர்பேட்டை, சந்தரபாடி வரையிலான 18 மீனவ கிராமங்களில் சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

    அரசின் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 இல் உள்ள இருபத்தியோரு விதிகளில் காரணமாக கடந்தமூன்று ஆண்டுகளாக சுருக்கு வலை, இரட்டை மடி வலை உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மீன்பிடி தடை காலம் முடிவடையவதையொட்டி சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி கோட்டாட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குவலை மீனவர்களை அழைத்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அர்ச்சனை தலைமை யில்அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    வட்டாட்சியர் செந்தி ல்குமார், டிஎஸ்பிலாமெக், கடலோர காவல் அமலா க்கபிரிவு இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா மற்றும் மீன்வளத்துறை அதிகா ரிகள் முன்னிலை வகி த்தனர்.அப்பொழுது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யக்கூடாதுஎன கோ ட்டாட்சியர் தெரிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க மறுத்த மீனவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்ய முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் எனவே எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் இந்த ஆண்டு தங்கள் மீன்பிடித் தொழிலை செய்ய அனுமதிக்க வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்து கலை ந்து சென்றனர்.

    மேலும் மீன்பிடி ஒழுங்கு முறைசட்டத்தை முழுமையாக அமல்படு த்தவும் கோரிக்கை விடுத்து ள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததால் மீனவர்கள் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
    • ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து 1200 விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம், பாம்பன் உள்பட தமிழக கடலோரப் பகுதியில் மீன் இனப்பெருக்கத்திற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் விதித்திருந்தது.

    இதனையொட்டி கடந்த 61 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை கடல் கரையோரத்தில் நிறுத்தி பாதுகாத்து வந்தனர். மேலும் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை சீரமைப்பது, மீன்பிடி சாதனங்களை புதுப்பிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததால் மீனவர்கள் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

    ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து 1200 விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீனவர்கள் 61 நாட்களுக்கு பின்பு மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று மீன்பிடி உபகரணங்களை சேகரித்துக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் சென்றனர்.

    மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கூறும்போது, நாங்கள் 61 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க செல்கிறோம். மீன் இன பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் எங்களுக்கு வருமானம் கிடைக்காது. தற்போது மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் எங்களுக்கு அதிகளவில் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • நேற்று நள்ளிரவு 12 மணியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் தடைக்காலம் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக, மீன் பிடிக்க தேவையான வலை போன்ற உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட மீனவர்கள் இன்று அதிகாலையில் உற்சாகமாக மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

    மீன்பிடி தடைக்காலத்தில் மீன் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை பலமடங்கு உயர்ந்தது. தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதால் மீன்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×