search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
    X

    நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

    • விசைப்படகுகளில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி போன்றவற்றை பொருத்தி சென்றனர். வலைகளை பழுது நீக்கி மீனவர்கள் படகில் ஆர்வமுடன் ஏற்றி சென்றனர்.
    • தடைக்காலத்திற்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் சென்று உள்ளனர்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி மீன்களின் இனப்பெருக்க காலத்தை கணக்கில் கொண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலில் மீன் பிடிக்க விசை படகுகளுக்கு தடை விதிக்கப்படும். இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.

    இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகளில் புறப்பட்டு சென்றனர்.

    அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்.

    நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்குச் சென்றனர். நாகை துறைமுகத்தில் இருந்து 100-க்கணக்கான விசைப்படகுகளுக்கு பூஜை செய்தும், கடலை வழிபட்டும் பின்னர் சென்றனர். இயந்திரம் பழுது நீக்கம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டி புது பொலிவுடன் படகுகள் சென்றன.

    விசைப்படகுகளில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி போன்றவற்றை பொருத்தி சென்றனர். வலைகளை பழுது நீக்கி படகில் ஆர்வமுடன் ஏற்றி சென்றனர்.

    தடைக்காலத்திற்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் சென்று உள்ளனர்.

    Next Story
    ×