search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் பிடித்தொழிலாளி"

    • அவர் 21-ந்தேதி இரவே தவறி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • கடலில் மாயமான சுனிலுக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    தேங்காய்பட்டணம் அருகே உள்ள தூத்தூரை சேர்ந்த பாஸ்டின், சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இவரது படகில் குமரி மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளாவை சேர்ந்த தொழிலாளர்களும் மீன்பிடி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம்போல் இவரது படகில் 16 தொழிலாளர்கள் கடந்த 21-ந்தேதி மாலை தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுனில் (வயது 41) என்பவர் முதன்முதலாக மீன்பிடித்தொழிலுக்கு சேர்ந்திருந்தார்.படகு மறுநாள் தேங்காய்பட்டணம் கடல் பகுதி 50 நாட் டிங்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டி ருக்கும்போது படகிலிருந்த சுனிலை காணவில்லை. அவர் 21-ந்தேதி இரவே தவறி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் மாயமான சுனிலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 நாட்கள் கடலில் தங்கி தேடியும் சுனில் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதனால் மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து படகு ஓட்டுனர் வர்கீஸ் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.

    மரைன் சப் - இன்ஸ் பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து மாயமான மீனவர் சுனிலை தேடி வருகிறார்.கடலில் மாயமான சுனிலுக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×