search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் சாவு"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்
    • மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அஞ்சு கூட்டுவிளை பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் சில்வஸ்டர் (வயது 70), மீனவர். இவருக்கு மனைவியும், 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கால் வழுக்கி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

    உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச் சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று சில்வஸ்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடல் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    • ஆந்திராவைச் சேர்ந்த 11 பேர் உள்பட மொத்தம் 18 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஆன்றனி பீட்டர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆந்திராவைச் சேர்ந்த 11 பேர் உள்பட மொத்தம் 18 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் நேற்று காலை 11.30 மணி அளவில் நடுக்கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது விசைப்படகு வலையின் போல்டு உடைந்து கீழே விழுந்ததில் ஆந்திராவைச் சேர்ந்த ராமுலு (வயது 52) என்பவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை சக மீனவர்கள் அதே படகில் அவசர அவசரமாக கரைக்கு கொண்டு வந்தனர். மாலை 4.15 மணிக்கு இவர்களது விசைப்படகு சின்னமுட்டம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. உடனே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமுலுவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • துறைமுக நுழைவு வாயிலில் மணல் திட்டு அடிக்கடி ஏற்படுவதால், படகுகள் விபத்தில் சிக்கி வருகின்றன
    • சைமன் வந்த பைபர் படகு எதிர்பாராதவிதமாக மணல் திட்டில் தட்டியதோடு துறைமுக தடுப்புச் சுவரிலும் மோதி யது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் கருங்கல் அருகே தேங்காப் பட்டணம் துறைமுகம் உள்ளது. இங்கிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றன.

    இந்த துறைமுக நுழைவு வாயிலில் மணல் திட்டு அடிக்கடி ஏற்படுவதால், படகுகள் விபத்தில் சிக்கி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணல் திட்டில் தட்டி, துறைமுக தடுப்பு சுவரில் மோதியதில் ஒரு பைபர் படகு சேதமடைந்தது.

    நேற்றும் ஒரு பைபர் படகு இதுபோல் விபத்தில் சிக்கி கடலில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் மணல் திட்டை அகற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு பைபர் படகு இதுபோல விபத்தில் சிக்கியதில் மீனவர் ஒருவர் பலியாகி உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    பூத்துைற 19-வது அந்தி யம் பகுதியைச் சேர்ந்தவர் சைமன் (வயது 48), மீனவர். இவர் இன்று அதிகாலை ஒரு பைபர் படகில் 4 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். மீன் பிடித்து விட்டு காலை 7.30 மணியளவில் அவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காற்றின் வேகமும் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது.

    அந்த நேரத்தில் சைமன் வந்த பைபர் படகு எதிர்பாராதவிதமாக மணல் திட்டில் தட்டியதோடு துறைமுக தடுப்புச் சுவரிலும் மோதி யது. இதனால் நிலை தடுமாறிய படகு கடலில் கவிழ்ந்தது.

    இந்த சம்பவத்தில் கடலில் தவறி விழுந்த சைமன், வலைக்குள் சிக்கிக் கொண்டார். இதனால் நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை சக மீனவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பலியான சைமனுக்கு, சொர்ணம் என்ற மனை வியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

    ×