search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமுட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற விசைப்படகில் வலை போல்டு உடைந்து விழுந்ததில் மீனவர் சாவு
    X

    சின்னமுட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற விசைப்படகில் வலை போல்டு உடைந்து விழுந்ததில் மீனவர் சாவு

    • ஆந்திராவைச் சேர்ந்த 11 பேர் உள்பட மொத்தம் 18 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஆன்றனி பீட்டர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆந்திராவைச் சேர்ந்த 11 பேர் உள்பட மொத்தம் 18 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் நேற்று காலை 11.30 மணி அளவில் நடுக்கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது விசைப்படகு வலையின் போல்டு உடைந்து கீழே விழுந்ததில் ஆந்திராவைச் சேர்ந்த ராமுலு (வயது 52) என்பவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை சக மீனவர்கள் அதே படகில் அவசர அவசரமாக கரைக்கு கொண்டு வந்தனர். மாலை 4.15 மணிக்கு இவர்களது விசைப்படகு சின்னமுட்டம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. உடனே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமுலுவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×