search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீஞ்சூர் பேரூராட்சி"

    • மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • குடிநீர் வரி செலுத்தாத 23 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் 2022-23ம் ஆண்டிற்கான குடிநீர் வரியை ஏராளமான குடியிருப்பாளர்கள் செலுத்தவில்லை. இதுகுறித்து பேரூராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை சொல்லியும் நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை.

    இந்த நிலையில் குடிநீர் வரி செலுத்தாத 23 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர். வருகிற 28-ந்தேதிக்குள் குடிநீர் கட்டண வரி செலுத்தாத அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு தெரிவித்து உள்ளார்.

    • பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் வெற்றிஅரசு தலைமையில் அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
    • மீஞ்சூர், வேளாளர் தெரு, பஜார் பகுதி, டி. எச் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் வெற்றிஅரசு தலைமையில் அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மீஞ்சூர், வேளாளர் தெரு, பஜார் பகுதி, டி. எச் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் சுமார் 712 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் 20 கடைகளுக்கு அபராதம் விதித்து ரூ.26ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டது. சோதனையின் போது இளநிலை உதவியாளர்கள் அன்பரசு, கருப்பையா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் உடன் இருந்தனர்.

    ×