search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மி்ன்தடை"

    • மின்தடை அறிவிப்பு குளறுபடியால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மின்சார வாரியம் கண்ணா மூச்சி காட்டாமல் உரிய நேரத்தில் மின்தடை அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களை சிரமப்படுத்துகிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் மின்சார வாரியம் நகர் மற்றும் புறநகர் என இரண்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் நகர்ப்புற அலுவல கத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் மின்சார பராம ரிப்புக்காக மின்தடை அறிவிப்பு வெளியிடப்படு கிறது. இந்த அறிவிப்பானது 2 நாட்களுக்கு முன்பே வெளியிடப்படுகிறது.

    ஆனால் ஏதோ ஒரு காரணம் கூறி மின்தடை அறிவிக்கப்பட்ட அன்று காலை இன்று மின்தடை இல்லை என்று திடீரென தகவல் தருகின்றனர். இவ் வாறு ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட தொழி லாளர்கள், தச்சு வேலை செய்பவர்கள் மற்றும் மின்சாரம் சார்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்க ளுக்கு சார்ந்த தொழில் நிறுவனங்கள் விடுமுறை விட்டு விடுகின்றனர்.

    ஆனால் அன்று காலை திடீரென மின்சார தடை இல்லை என அறிவிப்பதால் அவர்களுக்கு அன்று ஒரு நாள் வேலை பாதிக்கப்படுகி றது. மேலூர் மின்சார வாரி யம் 4 நாட்களுக்கு பின்னால் மீண்டும் நாளை மின்தடை என்றுஅறிவிப்பை வெளி யிட்டுள்ளனர்.

    இதனால் தொழில்கள் முடங்கவதோடு தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மின்சார வாரியம் கண்ணா மூச்சி காட்டாமல் உரிய நேரத்தில் மின்தடை அறி விப்பை வெளியிட்டு பொது மக்கள் சிரமத்தை குறைக்க உரிய நடவடிக்கை இனி மேலாவது மேற்கொள் வார்களா? அதிகாரிகள் உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கூறுகின்றனர்.

    ×