search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிளா"

    • மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.
    • வனத்துறையினர் மிளா மானை மீட்டு விளாத்திகுளம் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை நண்டு வலை வைப்பதற்காக சென்றனர். அதனை தொடர்ந்து இன்று காலையில் அந்த நண்டை எடுப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்றனர்.

    கடல் தொழில் முடிந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏதோ தத்தளித்துக் கொண்டி ருந்ததை பார்த்த சக மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கரை பகுதிக்கு வந்து மேலும் 2 பேரை அழைத்து சென்று அந்த மானை பத்திரமாக பைபர் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அங்கே அது தப்பி ஓட நினைத்ததால் அதை கால் பகுதியை கட்டி வைத்திருந்தனர்.

    பின்பு வனத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மானை மீட்டு விளாத்திகுளம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த அரியவகை மானை அப்பகுதி மீனவர்கள் வந்து பார்த்து ரசித்து செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

    இதுகுறித்து மீனவர் ஜேரோன் (பைபர் போட் உரிமையாளர்) கூறுகையில், நாங்கள் அதிகாலை 5 மணிக்கு கடலில் நண்டு வலையை எடுத்து நண்டுபிடித்து வரும்போது கரையில் இருந்து 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பகுதியில், கடலில் பறவைகள் கூட்டமாக மானை தூரத்தி கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். உடனே நாங்கள் 4 பேர் சேர்ந்து அதனை மீட்க முயன்றோம். ஆனால் அதன் எடை அதிகமாக இருந்ததால் எங்களால் அதனை மீட்க முடியவில்லை. பின்னர் கரைக்கு வந்து கூடுதலாக 2 பேரை அழைத்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளாவின் கொம்பில் கயிற்றை கட்டி கரைக்கு இழுத்து வந்து வனசரகத்திற்கு தகவல் கொடுத்தோம். பின்பு அவர்கள் வந்து ஆட்டோவில் ஏற்றி வனப்பகுதியில் விட்டனர் என்றார்.

    • வனத்துறையினர் விசாரணை
    • 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு பகுதியில் சுற்றித்திரிந்தது

    கன்னியாகுமரி:

    குளச்சல் தும்பாக்காடு குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு 2 கடமான் (மிளா) குட்டிகள் நின்று கொண்டிருந்தன. இதனைக்கண்ட அப்பகுதி இளைஞர் ஒருவர் தனது செல்போனில் அந்த மிளா குட்டிகளை படம் எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் தும்பாக்காடு குடியிருப்பு பகுதிக்கு விரைந்து வந்தனர்.அதற்குள் மிளா குட்டிகள் மாயமாகி விட்டது. இதனால் வனத்துறை ஊழியர்கள் திரும்பி சென்றனர்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு அருகே பிலாவிளை பகுதி வாழைத்தோட்டத்தில் இரவு இது போல் மிளா சுற்றித்திரிந்தது என அப்பகுதியினர் மண்டைக் காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் வனத்துறையினர் வருவதற்கு முன்பு மிளா அங்கிருந்து மாயமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனை யாரேனும் சட்ட விரோதமாக வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்தார்களா? மாயமான கடமான் குட்டிகள் அப்பகுதி தோட்டத்தில் பதுங்கி உள்ளதா?எனவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×