search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்பகிர்மான நிலையம்"

    • ராய்ப்பூரில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • பற்றி எரியும் தீயால் அந்த பகுதியே புகைமூட்டமாக மாறியது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின்பகிர்மான நிலையம் அமைந்துள்ளது.

    இந்நிலையில், அந்த மின் பகிர்மான நிலையத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பற்றி எரியும் தீயால் அப்பகுதி புகை மூட்டமாக மாறியது. பற்றி எரிந்த தீயில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளது.

    கோடா பகுதியில் உள்ள பாரத் மாதா சவுக் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்துச் சிதறின.

    தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×