search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்"

    • புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • அரசின் நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் புதுவையில் மின் தடை தொடர்கதையாக இருந்து வருகிறது.

    புதுவையில் நகர் மற்றும் கிராமப் புறங்களின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு வரை மின்சாரம் தடைபட்டதால் மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதை கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின்வினியோகம் சீரமைக்கப்பட்டது.

    5-வதுநாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் அந்தந்த பகுதியில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து மின்துறை ஊழியர்களால் மின்வெட்டு ஏற்படுமானால் மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ் நடவடிக்கை பாயும் என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தை எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் வந்து முற்றுகையிட்டு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.
    • லாஸ்பேட்டையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் புதுவையில் மின் தடை தொடர்கதையாக இருந்து வருகிறது.

    புதுவையில் நகர் மற்றும் கிராமப் புறங்களில் நேற்றும் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மாலை 5.30 மணி அளவில் நகர், கிராமங்கள் உள்பட மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    இரவு வெகுநேரமாகியும் மின் வினியோகம் சீராகவில்லை. இ்தனால் பஜார் பகுதியான நேரு வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, புஸ்சி வீதி மற்றும் பஸ் நிலையம், முத்தியால்பேட்டை, வெங்கட்டாநகர், முதலியார்பேட்டை, ஒயிட் டவுன், கடற்கரை சாலை, உப்பளம் ஆகிய பகுதிகளும், கிராமங்களும் இருளில் மூழ்கின.

    இதற்கிடையே கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தை எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் வந்து முற்றுகையிட்டு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். லாஸ்பேட்டையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ராஜா தியேட்டர் சந்திப்பு நெல்லித்தோப்பு தொகுதி, காமராஜர் நகர், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெற்றது. கிராமபுற பகுதிகளான திருக்கனூர் கடை வீதி, கொடாத்தூர், சோரப்பட்டு, வாதானூர், விநாயகம் பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெற்றது.

    மாநிலம் முழுவதும் நகர் மற்றும் கிராம புறங்களில் நடந்த திடீர் மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் செய்யப்பட்டதால் சகஜ நிலை திரும்பியது. ஆனாலும் வேறு சில இடங்களில் இரவு 11 மணிக்கு பிறகும் மின் விநியோகம் சீராகவில்லை. கிருமாம்பாக்கம், புதுநகர், கன்னியக்கோவில், முள்ளோடை பகுதிகளில் மின் வெட்டு தொடர்ந்ததால் இரு சக்கர வாகனங்கள் கூட நுழைய முடியாத அளவுக்கு தடுப்புகள் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அங்கு அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆகியோர் வந்து மின் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனாலும், பொதுமக்கள் இரவு 11 மணிக்கு பிறகும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.

    • கடந்த 2 நாட்களாக கன்னியகோவில் புதுநகர், வாக்கால்ஓடை ஆகிய கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    பாகூர்:

    புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

    இதனை கண்டித்து பல இடங்களில் பொதுமக்கள் அவ்வப்போது போராட்டங்களில் குதித்துள்ளனர். அதிகபட்சமாக சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பாகூர், கன்னியகோவில், கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்தது. மழையின் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு அந்த மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கன்னியகோவில் புதுநகர், வாக்கால்ஓடை ஆகிய கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மேலும் குடிநீர் விநியோகமும் அவ்வப்போது நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த புதுநகர் மக்கள் கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 7.45 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த மறியலின் போது வீட்டில் இருந்த பெஞ்ச், மரப்பொருட்களை ரோட்டில் கொட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்களும் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தால் வாகனங்கள் மூலம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    நீண்ட நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தது. அருகிலுள்ள கல்லூரிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் நடந்தே சென்றனர். அதுபோல் தொழிலாளர்களும் நடந்து சென்றனர்.

    தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் போலீசாரின் உதவியுடன் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் சுமார் ½ மணி நேரம் நீடித்தது.

    இதே போல பாகூர் அடுத்த குருவிநத்தம் தூக்குப்பாலம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 24 பேரை பாகூர் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல பாகூர் நகரப் பகுதியில் நேற்று இரவு முதல் காலை வரை மின்சாரம் தடைபட்டு இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதற்குள் மின்விநியோகம் செய்யப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.

    • தண்ணீர் இல்லாமல் துத்திப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.
    • பொதுமக்கள் மின் துறை அதிகாரிகள், போலீசாருக்கு புகார் அளித்தும் மின் வினியோகம் இல்லை.

    சேதராப்பட்டு:

    புதுவையில் மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் நேற்று பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுவை சேதராப்பட்டு அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு திரண்டு சென்று மின்துறை ஊழியர்களிடம் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இரவு மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுமார் 5 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தண்ணீர் இல்லாமல் துத்திப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். பொதுமக்கள் மின் துறை அதிகாரிகள், போலீசாருக்கு புகார் அளித்தும் மின் வினியோகம் இல்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த துத்திப்பட்டு கிராம பொதுமக்கள் அங்குள்ள தேவாலயம் அருகே மெயின் ரோட்டில் மரங்களை வெட்டி சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேதராபட்டிலிருந்து பத்துகண்ணு செல்லும் சாலையிலும், கடப்பேரி குப்பத்திலிருந்து புதுவை செல்லும் சாலைகளிலும் நீண்ட தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

    சம்பவம் அறிந்து அங்கு சென்ற சேதராப்பட்டு போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். மின் வினியோகம் கிடைக்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×